Skip to main content

நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 24 குரங்குகள்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

24 monkeys mysteriously found dead on the highway

 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்கூர் என்ற வனப்பகுதியில் 24 குரங்குகள் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

 

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில், 18 ஆண் குரங்குகளும் 6 பெண் குரங்குகளும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும், இந்தக் குரங்குகள் உயிரிழந்தது குறித்து மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டு, அவை இறந்ததற்கான காரணங்களைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்