Skip to main content

10ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய 12வது மாணவன்!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

 12th student made the 10th class student pregnant

 

10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 12வது மாணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்,  தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் அவர் வீட்டில் இருந்து பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  அடிக்கடி வயிறு வலிப்பதாக சொல்லி இருக்கிறார்.  நேற்று முன்தினம் சிறுமிக்கு திடீரென தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

 

வலி தாங்க முடியாமல் சிறுமி  துடித்தார். உடனே அவரது பெற்றோர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.  சிறுமியைப் பரிசோதனை செய்த டாக்டர் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அதான் தற்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சிறுமிக்கு குழந்தை பிறந்து விடும் என்று கூறியுள்ளார். இதைகேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில்  டாக்டர் கூறியபடி சில மணி நேரத்தில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சிறுமியிடம் அது குறித்து பெற்றோர் விசாரணை செய்தனர். அப்போது சிறுமி அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னிடம் நெருக்கமாக பழகி ஆசை வார்த்தை கூறி சில முறை தம்மிடம் தனிமையில் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக தனக்கு குழந்தை உருவாகி உள்ளது. இது குறித்து எனக்கு எந்த விபரமும் தெரியவில்லை என்று சிறுமி கூறி உள்ளார். 

 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரி பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த மாணவன் மீது போக்சோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து மாணவனை தீவிரமாக தேடி வருகிறார்கள். மகள் கர்ப்பம் அடைந்திருப்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பெற்றோர்கள் இருந்திருக்கிறார்களே என்றும்; பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த  12 ஆம் வகுப்பு மாணவனின் செயலும் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்