Skip to main content

பாஜகவுடன் திமுக ஏன் நேரடியாக மோதவில்லை: சீமான் கேள்வி

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

நக்கீரன் இணையதளத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு பேட்டி அளித்தார்.

 

திரைத்துறையில் இருந்து வந்தவர் நீங்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் பாஜக வேண்டாம் என்கிறார்கள். மேலும் சிலர் இந்த நேரத்தில் பாஜகவும் வேண்டாம், காங்கிரஸூம் வேண்டாம் என்று சொல்வதே இயல்பாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி இருக்கிறது என்கிறார்களே?

 

seeman


 

அது சுத்த பைத்தியக்காரத்தனம். காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு மாற்று சொல்லுங்கள். மதவாதத்திற்கு நாங்கதான் எதிர் என்று பேசுகிறது திமுக. முதலில் பாஜகவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த கட்சி அது. ஒன்றுமே இல்லாததை ஒன்றாக்கியது யார்?
 

சில நிபந்தனைகளோடதான் அந்த கூட்டணி அமைந்தது?
 

நிபந்தனை நிபந்தனை என்று பேசக்கூடாது. செஞ்சீங்களா இல்லையா? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, அதனை எதிர்த்து தமிழ்நாட்டில் போராடினீர்கள். ஆனால் மத்தியில் காங்கிரஸ் அதனை கொண்டு வரும்போது ஆதரித்தீர்கள். இங்க எதிர்த்துவிட்டு, அங்கு ஆதரித்துள்ளீர்களே என்று கலைஞரிடம் கேட்கும்போது, மதவாத சக்திக்கு எதிராக வந்துவிடும் என்றார். இரண்டு மாதம் கழித்து ஏற்காடு இடைத்தேர்தலில் எங்களை ஆதரியுங்கள் என்று பாஜகவிடம் ஆதரவு கடிதம் கேட்டார். இது என்ன மதவாத எதிர்ப்பு. 

 

இந்த மண்ணில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது. எத்தனை இடங்களில் திமுக நேரடியாக மோதுகிறது. தூத்துக்குடியில் கனிமொழியை அறிவித்த பிறகு, தமிழிசை அந்த தொகுதியில் நின்றுவிட்டார்கள். தவிர்க்க முடியாமல் நிற்கிறார்கள். மற்ற நான்கு இடங்களில் ஏன் உதயசூரியன் சின்னத்தில் நேரடியாக யுத்தம் செய்து நிற்கவில்லை. அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செஞ்சீங்கல்ல ஏன் போட்டியிடவில்லை. சிவகங்கையிலும், நாகர்கோவிலிலும் என்ன செய்தீர்கள். கூட்டணிக்கு கொடுத்துவிட்டு விலகிவீட்டீர்கள். மற்ற இரண்டு இடங்களை முஸ்லீம் லீக் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டீர்கள். 
 

ஒரு போர் வீரன் யுத்தத்திற்கு நேரடியாக போக வேண்டும். வேற ஆளை அனுப்பிவிட்டு நான்தான் எதிரின்னு சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழ்நாட்டில் பாஜக எங்கு இருக்கிறது. ஒன்றுமில்லாதவனை அடிக்க ஏன் ஊரை திரட்டுக்கொண்டு வரணும். வடஇந்தியாவில் அவர்களை வீழ்த்துவதற்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் திட்டம் வைத்திருக்கிறார்கள். மம்தா பானர்ஜி திட்டம் வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். 
 

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது அதில் எந்த கருத்தை முன்வைப்பீர்கள். ஆட்சியின் சாதனையை சொல்லுங்கள். மதவாதம் என்று நீங்கள் பேசாதீர்கள். உங்க ஜெகத்கஸ்பர் எழுதுகிறார் கிருத்துவ மக்கள் எல்லோரும் சேர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று. இதை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இவர்கள் எல்லாம் இங்கு போகிறார்கள். நாம் பாஜகவுக்கு போக வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? இது எவ்வளவு பெரிய மறைமுக வளர்ச்சி. 

 

mkstalin


 

திமுகவிலும் இந்துக்கள் இருக்கிறார்களே?
 

BJPயின் B டீமே திமுகதான். வருபவர்களை நீங்க எப்படி பார்க்கிறீர்கள். மதமாக பார்க்கிறீர்கள். அப்போது நீங்களும் பிஜேபிதானே. 90 விழுக்காடு இந்து என்று ஸ்டாலினுக்கு எப்படி தெரியும். வருபவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று பார்க்கிறீர்கள். நீங்க ஏன் ஒரு சீட்டுக்கூட இஸ்லாமியர்களுக்கு கொடுக்கவில்லை. அப்போது நீங்களும் பிஜேபிதானே. பிஜேபியுடன் அதிமுக கூட்டணி வைத்துவிட்டது. இதற்கு பிறகு கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டு விழாது என்று அது முடிவு செய்துவிட்டது. அதனால் அதிமுக சீட்டு கொடுக்கவில்லை. நீங்கள் ஏன் சீட் கொடுக்கவில்லை. உங்களுக்கும் பிஜேபிக்கும் வித்தியாசம் என்ன? 



 

கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சி இருக்கிறதே?
 

கூட்டணி வைத்ததால் சீட். ஒரு சீட் கொடுத்ததால் நாடு எங்கும் உள்ள ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். மண்புழுவை போட்டு மீனை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறது. மண்புழுவின் எடை என்ன. மீனின் எடை என்ன? இது எந்த மாதிரியான அணுகுமுறை. எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றுவீர்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.