Skip to main content

“கோரிக்கைகளை உடனே நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்..” - நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சு 

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

"We are ready to fulfill the demands immediately.." - Ministers talk with executives

 

2024 பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டு அரசியலிலும் வேகமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியதுடன், தமிழ்நாட்டில் மண்டல வாரியாக கட்சி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க, எதிர்க்கட்சியான அதிமுக பிரம்மாண்ட மாநாட்டிற்குத் தயாராகி மாவட்டந்தோறும் கட்சிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.

 

இந்த நிலையில், கடந்த வாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களை காணொளி மூலம் சந்தித்து உட்கட்சி மோதல்களைத் தவிர்த்து கட்சித் தொண்டர்களைச் சந்தித்து தேர்தலுக்கு தயார்படுத்துங்கள் என்றார். இதனையடுத்து மாவட்டந்தோறும் ஒன்றியங்கள் வாரியாக கட்சி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் சந்தித்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பனங்குளம் கிராமத்திலும், மாங்காடு கிராமத்திலும் ஒன்றியச் செயலாளர் ரவி தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞான.இளங்கோவன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மா.செ வும் அமைச்சருமான ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளின் குறைகளைக் கேட்டறிந்தனர்.

 

அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது, “தமிழ்நாடு ஆட்சியைப் பார்த்து பா.ஜ.க வுக்கு பயம் வந்துள்ளதால் தான் அண்ணாமலை தமிழ்நாட்டை சுற்றி வருகிறார். இதனால் எந்தப் பயனும் இருக்காது. ஆனால் தேர்தல் நேரத்தில் எந்த அளவிற்கும் இறங்கிப் போவார்கள். அதனால் நாம் ஒற்றுமையாக இருந்து கட்சித் தலைமையின் உத்தரவையேற்று தேர்தல் பணி செய்ய வேண்டும்” என்றார்.

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, “கடந்த அதிமுக அரசு ஏராளமான மக்கள் நலப்பணிகளைச் செய்யாமல் விட்டுச் சென்றுள்ள சுமையையும் சேர்த்து இப்போது சுமக்கிறோம். 27 மாத திமுக ஆட்சியைப் பார்த்து மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கும் அதனுடன் ஒட்டியுள்ள அ.தி.மு.க.வுக்கும் பயம் வந்துவிட்டது. நீங்கள் தான் கட்சி. தொண்டர்களால் தான் இன்றைய வெற்றி சாத்தியமாகி உள்ளது. உங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகளை மனுக்களாகக் கொடுங்கள். நிறைவேற்றுவோம். அதே போல உங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

 

கிராமங்கள் வாரியாக கட்சி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு அவர்களிடம் கோரிக்கைகளைப் பெற்றுள்ளனர். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தலில் கட்சித் தொண்டர்களின் பணி சிறப்பாக இருக்கும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். மேலும் மாவட்ட அளவில் உள்ள யார் பெரியவர் என்ற உட்கட்சி மோதல்களை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.