Skip to main content

அண்ணன் திமுக, தம்பி அதிமுக..! தொகுதி யாருக்கு..? 

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

Siblings contest in same constituency at dindigul aandipatti


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியிகள் பரபரப்பாகின. பெருத்த எதிர்பார்ப்புக்குப் பிறகு அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி தொகுதிகளையும், கட்சி வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. 

 

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்றம் தொகுதி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி என்ற பெருமையைக் கொண்டது. இந்தத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா பக்கம் சென்ற தங்க தமிழ்செல்வன், தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டது. அதை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து அவருடைய உடன் பிறந்த அண்ணன் மகாராஜன் திமுக சார்பில் போட்டியிட்டார். 

 

Siblings contest in same constituency at dindigul aandipatti

 

எதிரும் புதிருமாக உள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதியதில் அப்போது ஆண்டிப்பட்டி தொகுதி பரபரப்புக்கு உள்ளானது. அந்தத் தேர்தலில் 12 ஆயிரத்து 363 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மகாராஜன் வெற்றிபெற்று தம்பி லோகிகராஜனை தோல்வியடையச் செய்தார். இதையடுத்து 20 ஆண்டுகள் அதிமுக வசமிருந்த ஆண்டிப்பட்டி தொகுதியை திமுக கைப்பற்றியது.

 

Siblings contest in same constituency at dindigul aandipatti

 

இந்த நிலையில், வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த லோகிராஜன் மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திமுக சார்பில் ஆண்டிபட்டி சிட்டிங் எம்.எல்.ஏ.வான மகாராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். 

 

இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் அண்ணன் தம்பி இருவரும் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த ஆண்டிபட்டி தொகுதியைத் தட்டிப்பறித்த திமுக, அதை தக்கவைத்துகொள்ள தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் இழந்த ஆண்டிபட்டி தொகுதியைக் கைப்பற்ற அதிமுக களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இப்படி அண்ணன் தம்பியாக இருந்தாலும் அரசியல் களத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருப்பது, மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

Next Story

வாக்குரிமையை உறுதி செய்ய வழக்கு தொடர்ந்த ஓட்டுநர்கள்.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Drivers suing to confirm suffrage .. High Court closes case ..!


அடுத்த தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என்றும், அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது.

 

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.