Skip to main content

“பிரதமர் ராமேஸ்வரத்திலும் அமித்ஷா கோவையிலும் போட்டியிட வேண்டும்” - அர்ஜுன் சம்பத்

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

“Prime Minister should contest in Rameswaram and Amit Shah in Coimbatore” Arjun Sampath

 

பிரதமர் ராமேஸ்வரத்திலும் அமித்ஷா கோவையிலும் போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

 

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும். பிரதமர் மோடி போன முறை காசியில் போட்டியிட்டார். இந்தியாவில் இரண்டு நகரங்கள் தான் முக்கியம். ஒன்று காசி மற்றொன்று ராமேஸ்வரம். இந்த முறை பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும்.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோயம்புத்தூரில் போட்டியிட வேண்டும். கோயம்புத்தூரில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளார்கள். விடுதலைச் சிறுத்தைகள் நேரடியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராகச் செயல்படுகிறார்கள். அதனால் அமித்ஷாவும் மோடியும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும். அவ்வாறு போட்டியிட்டால் 40க்கு 40 தமிழ்நாட்டில் வெல்லலாம்.

 

முன்னால் இருந்த நிலைமை வேறு. இப்பொழுது இருக்கும் நிலைமை வேறு. மோடியைப் பிரதமராக ஏற்றுக்கொள்கின்ற கட்சிதான் தமிழகத்தில் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக, பிஜேபி கூட்டணி மிக வலிமையாக உள்ளது. அந்தக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில பேர் எதையாவது சொல்லுவார்கள். கூட்டணி மிக வலுவாக உள்ளது.

 

எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். திராவிட இயக்க ஆட்சியிலேயே எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆட்சி தான் சிறந்த ஆட்சி. மின்சார பிரச்சனை கடந்த ஆட்சிக்காலத்தில் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் இல்லை. திராவிட இயக்க முதலமைச்சர்களில் கலைஞர், ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் என அனைவரையும் விட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். திமுக ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகிறது. இந்த ஆட்சிக்கு நிச்சயமாக 2024 தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள். 40 இடங்களிலும் அதிமுக, பிஜேபி கூட்டணி வெல்லும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.