Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
pon radhakrishnan


நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
 

திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது, 
 

தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என அமித்ஷா அதிமுக அரசை மட்டும் குறைசொல்லவில்லை. இதில் ஒரு கட்சியை மட்டும் தனிமைபடுத்தாதீர்கள். அவர் தெளிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்பதை தான் அவர் கூறியுள்ளார். 
 

 

 

நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பதை மக்கள் வரவேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடக்கிறது. இதை மக்கள் விரும்பவில்லை. இதனால், ஒரே நேரத்தில் தேர்தல் வருவதை மக்கள் விரும்புகின்றனர். இதை கண்டு பயப்படுவர்களுக்கு அது அவர்களுக்கு சொந்த பயத்தை காட்டுகிறது.
 

 

 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும். சட்டசபை தேர்தலில் ஆளுமையை நிரூபிக்கும். எந்த நேரத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள பா.ஜ.க. தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 


 

சார்ந்த செய்திகள்