Skip to main content

முதல்வர் முறைப்படி அறிவிப்பார்..! - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

dddd

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயலூர் ஊராட்சியில், வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைத் துவக்கிவைத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 35 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடன்களை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து, நம்பியூர் பகுதிகளில் சுமார் 340 -க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடன், கன்று வளர்ப்பு கடன், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா வழங்குதல் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசு ஆந்திராவையோ, கேரளாவையோ கவனிக்க வேண்டியது இல்லை. மாணவர்களையும், பெற்றோர்களையும் கவனிக்கிற அரசு என்ற முறையில் பள்ளிகள் திறப்பு குறித்து, வருகிற நவம்பர் 9 -ஆம் தேதி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பித்து பின்னர் முடிவு செய்யப்படும். 

 

மாணவர்களின் நலன் கருதியே பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கருத்துகள் வந்ததன் அடிப்படையில் தான், முழுமையான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முறைப்படி அறிவிப்பார்.

 

'கருத்துக் கேட்பு, கண்துடைப்பு' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, எதற்கெடுத்தாலும் கண்துடைப்பு என்றால் என்ன செய்வது? பெற்றோர்களின் ஆலோசனையைக் கேட்ட பிறகுதான் முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம். 

 

cnc

 

நீட் தேர்வுப் பயிற்சி 14ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இதில், 15,492 பேர் பயிற்சிபெற உள்ளனர். இன்னும் சேரவிருக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தாண்டு பொதுத்தேர்வு ரத்தாகுமா என்ற கேள்விக்கு, அது யோசிக்கவேண்டிய ஒன்று. துறை என்ன சொல்கிறது என்று தெரிந்துதான் எதையும் தெரிவிக்கமுடியும். அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வு செய்வார் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கோடை காலத்தில் அரைநாள் விடுப்பு; அதிரடி அறிவிப்பு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Action Notification on Half day leave during summer in telangana

நடப்பாண்டில், இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தை விட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெலங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும் என்றும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பமும், குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. 

கோடை காலத்தை ஒட்டி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரைநாள் மட்டுமே செயல்படும். அதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை வகுப்புகள் முடிந்ததும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில்,10ஆம் வகுப்புக்கு மட்டும் மதிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். காலையில் தேர்வுகள் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பிறகு, மதிய வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.