Skip to main content

இந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிட வேண்டும்... ஆட்சியரிடம் மனு கொடுத்த காங்கிரஸ் கமிட்டியினர்!! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
This petition should be sent to the President ... The Congress Committee who gave it to the Collector

 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார். அதனடிப்படையில் குடியரசுத் தலைவர் மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியரசு  தலைவருக்கு, இந்த மனுவை அனுப்பிட வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்தனர். 

 

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் ஜவகர் பேசுகையில், “மத்தியில் இருக்கும் பாஜக அரசு கரோனாவை தடுப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்பதை அறிவுறுத்தி வருகிறது. ஆனால் அந்த ஊசியை அனைத்து மாநிலங்களுக்கும் எந்த விலையும் இல்லாமல்  வழங்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நாட்டிலேயே மிகப் பெரிய ஊசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்தந்த மாநிலங்களுக்கு உரிய தடுப்பூசிகள் வழங்கப்படுவதில்லை,  மாநில அரசே தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. 

 

இதனால் மாநில அரசுகள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. எனவே இதை எல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் போய் சேர வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்தனர். இதில்  திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் ஜவஹர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.