Skip to main content

“மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சிதான்” - கமல்ஹாசன்

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

MNM leader kamalhasan press meet at trichy


மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திருச்சியில் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தில், இரண்டாம் நாளான இன்று, மகளிர் ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அதில், “இங்கே நாங்கள், ஒரு பெரிய எழுச்சியை பார்த்து வருகிறோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் இருப்பது அதிலும் மகளிர் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.


  

தமிழகத்தில் மூன்றாவது அணி எங்கள் தலைமையில் அமையும். தமிழகத்தில் ஊழல் இல்லை என்று கூறமுடியாது. தமிழகம் முழுக்க நடைமுறையிலிருக்கும் லஞ்சத்தின் விலைப்பட்டியல் தற்போது நான் கூறுகிறேன் (அப்போது லஞ்ச பட்டியலை வாசித்தார்). இதில் பெண்களைவிட ஆண்களிடம் லஞ்சம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 

 


அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு பெண்ணாக இருந்தால் 300 ரூபாயும் ஆண் பிள்ளையாக இருந்தால் 500 ரூபாயும், பிறப்பு சான்றிதழ் 200 ரூபாய் ஆணாக இருக்கும் பட்சத்தில் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என லஞ்ச பட்டியல் வாசித்தார்.

 


இணையதள வசதியுடன் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணிணி அரசு சார்பில் வழங்கப்படும். பேப்பர் இல்லா மின்னணு இல்லங்கள், மின்னணு அலுவலகங்களை மக்கள் நீதி மய்யம்  உருவாக்கும். கணிப்பொறி என்பது இலவசம் அல்ல அது அரசுடைய முதலீடு; அதை அரசு கொடுக்கும். 

 

ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு தலைநகர் ஆக்கப்படும். அந்தந்த தொழில் சார்ந்த, துறை சார்ந்த மாவட்டங்கள் தலைநகராக்க மக்கள் நீதி மையத்தால் முடியும்” என்றார்.

 

மேலும், எம்.ஜி.ஆரை மட்டுமே முன்னெடுக்கின்ற நீங்கள், கலைஞரை ஏன் முன்னெடுக்கவில்லை என்ற கேள்விக்கு  பதில் அளித்த கமல், “இங்கு எது தேவைப்படுகிறதோ அதை நான் முன்னெடுப்பேன். இட ஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று; செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேட வேண்டும்” என்றார்.  

 

மேலும் செய்தியாளர்கள் திராவிட கட்சிகளை குறித்து கேள்வி கேட்டத்தற்கு, “மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சிதான்” என்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, “மூன்றாவது அணி அமைந்தால் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். மக்கள் நீதி மையம் தலைமையில்  3-ஆவது அணி அமையும்; மதவாதம் இல்லை என்று சொல்லவே முடியாது. விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும். அது நம்முடைய நாட்டில் நடைபெறக் கூடாது என்பதே மக்கள் நீதி மய்யம் நினைக்கிறது. 

 

அத்தனை லட்சம் விவசாயிகளை பார்க்க முடியாத மோடியால் கமல்ஹாசன் நான் ஒருவன் போய் எப்படி சாதித்துவிட முடியும்.; டார்ச் லைட்டு எங்களுக்கு உரியது தான். தேவைப்பட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவோம்” என்றார்.

 


ரஜினி அரசியல் கட்சியை துவங்குவதாக நாடகமாடுகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் “கட்சி துவங்குவது முக்கியமல்ல அவர்  உடல்நிலை தான் முக்கியம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; பெற்றோர் குற்றச்சாட்டு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Student incident in private college hostel; Accusation of parents

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில்  தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில்  தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், 'தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே' எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Next Story

“கமல்ஹாசனின் நடிப்பை அதிகளவில் பார்க்க முடியும்” - இந்தியன் 2 குறித்து ஷங்கர்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Shankar on Indian 2 to praise kamalhaasan

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியிட்டு விழா, கடந்த ஜூன் 1ஆம் தேதி சென்னை உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், இந்தியன் 2 படத்தின் படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய இயக்குநர் ஷங்கர், “இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2. முதல் பாகமாக இந்தியன் படம் தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தியன் 2 தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது. 

முதல் பாகத்தில், 40 நாட்கள் சிறப்பு மேக்கப் (பிராஸ்தெட்டிக் மேக்கப்) போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில், சுமார் 70 நாட்கள் சிறப்பு மேக்கப் போட்டு கமல் நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் இறுதி நேரம் வரை கமல்ஹாசன் மிகவும் அர்ப்பணிப்போடு நடித்தார். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. ஆனால், இந்த படத்தில், கமல்ஹாசனின் நடிப்பை முதல் பாகத்தில் இருந்ததை விட அதிகளவில் பார்க்க முடியும்” என்று கூறினார்.