Skip to main content

விடிய விடிய விசாரணை... நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

investigation... Rajendra Balaji in court!

 

3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக இருந்தார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில் நேற்று கர்நாடகாவில் ஹசன் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் அழைத்து வந்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜிடம் மதுரை சரக டிஐஜி காமினி, விருதுநகர் எஸ்பி மனோகரன் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இன்பத்தமிழன் உட்பட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில் விசாரணைக்குப் பிறகு விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பு ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள சிவகாசி பிரதான சாலையில் உள்ள நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் 300க்கு மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரபாலாஜி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ராஜேந்திர பாலாஜி தரப்பில், ''எங்களது முன்ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது எனவே இந்த கைது நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும்" என நீதிபதி முன் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால் அரசு தரப்போ குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடன் கைதானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்