Skip to main content

''சுற்றி சுற்றி வந்தாலும் நல்லவருக்குத்தான் ஞானப்பழம் ''-ராகுல்காந்தியின் யாத்திரை குறித்து அண்ணாமலை விமர்சனம்!

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

"If you go around you will get the fruit of wisdom..." - Annamalai review of Rahul Gandhi's Yatra!

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி  இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை இன்று ராகுல் துவங்கியுள்ளார்.

 

"If you go around you will get the fruit of wisdom..." - Annamalai review of Rahul Gandhi's Yatra!

 

இந்நிலையில் இன்று காலை சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து கேள்வி எழுப்பினர் . அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''ராகுல் காந்தி இன்று 'பாரத் ஜோடோ' என்ற யாத்திரையை துவங்க இருக்கிறார். இதற்கான நோக்கம் இந்தியாவை ஒன்றிணைப்பது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி இந்த யாத்திரைக்கு செல்லும்பொழுது தெரியும் நமது இந்தியா மோடியின் தலைமையிலே இணைந்திருக்கிறது. குறிப்பாக முதன்முதலாக முழுமையாக ஆர்ட்டிக்கிள் 370 எடுத்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கிறது.  வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. இதனை ராகுல் காந்தி அவரது யாத்திரையில் பார்த்துக்கொண்டே செல்வார்.

 

காங்கிரசில் குடும்பத்தில் ஒருவருக்குதான் பதவி என காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அறிவித்த உடனே சிவகங்கையை சேர்ந்த கார்த்தி சிதம்பரத்திற்கு பதவி இருக்கும்போதே ப.சிதம்பரத்திற்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்கப்பட்டது. இப்பொழுது இருக்கும் காங்கிரஸ் தலைவரிடம் போய் என்ன சார் ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு பேருக்கு பதவி கொடுத்துருக்கீங்க தொண்டர்கள் எல்லாம் பாவம் இல்லையா என்று  கேட்டபொழுது, கே.எஸ்.அழகிரி சொன்னார் அவங்க ரெண்டு பெருகும் வேற வேற ரேஷன் கார்டு இருக்கு என்று. இதுதான் காங்கிரசின் நிலைமை பேச்சு ஒன்றாக இருக்கும் செயல் ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் காரர்களுக்கு தெரியும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் காந்தி குடும்பத்தைச் சுற்றி சுற்றி வந்தால்தான் ஞானப்பழம் கிடைக்கும். பல தலைவர்கள்  ஞானப்பழத்தை பெரும் முயற்சியில் காந்தி குடும்பத்தைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஞானப்பழம் என்பது நல்ல மனிதர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இந்த யாத்திரை மீண்டும் ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக கொண்டுவர நடத்தப்படும் நாடகம்'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.