Skip to main content

ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்... கூட்டணிகள் தொடருமா? உடையுமா?

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

election

 

நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான தேதிகளை மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருக்கிறார்.

 

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. திமுக ஆட்சி வந்ததும் இதற்கான தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் வேகம் காட்டியது மாநில தேர்தல் ஆணையம். ஏற்கனவே செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்த நிலையில்,  சட்டமன்ற கூட்டம் நடந்து வந்ததால் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காத்திருந்தது ஆணையம்.

 

சட்டமன்ற கூட்டம் இன்று (13.9.21) மதியத்தோடு முடிவடையும் நிலையில், மாலை 5 மணிக்கு தேர்தல் தேதியை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த ஆணையர் பழனிகுமார், தேர்தல் தேதியை அறிவித்தார்.

 

Local elections for 9 districts - Voter list released!

 

அதன்படி, 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் : செப்டம்பர் 15 , வேட்புமனுத்தாக்கல் முடிவு : செப்டம்பர் 22 , வேட்புமனு பரிசீலனை : செப்டம்பர் 23 ,  வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் : செப்டம்பர் 25 , முதல்கட்ட தேர்தல் தேதி : அக்டோபர் 6 , இரண்டாம் கட்ட தேர்தல் தேதி : அக்டோபர் 9 , வாக்கு  எண்ணிக்கை : அக்டோபர் 12 -என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணியாளர் பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் காரணங்களால் இந்த தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துகிறது ஆணையம்.

 

தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. அக்டோபர் 16-ந்தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக, அதிமுக கட்சிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளிலும் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உருவான கூட்டணிகள் அப்படியே தொடருமா? அல்லது உடையுமா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும். ஏனெனில், கூட்டணி கட்சிகள் அனைத்துமே கௌரவமான இடங்களில் போட்டியிட துடிக்கின்றன என்பதுதான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.