Skip to main content

கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

cpim


சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகள் கரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது அதிர்ச்சியளிக்கிறது.  
 

 

தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு, முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு, அந்த நேரத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், இந்தப் பரவலைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அரசு தட்டுத்தடுமாறி குழப்பங்களால் ஊரடங்கு வாபஸ் பெற்று இப்போது வேறு வழியில்லாமல் 4 மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது. 


இப்போதுகூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வது ஊரடங்கு அறிவித்தது அவசியம் என்று சொன்னால் கூட, இதுமட்டுமே நோய்ப் பரவல் தடுத்துவிட முடியாது. எனவே ஒருங்கிணைந்த திட்டம் என்ற முறையில் தமிழக அரசு, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், நான்கு மாவட்டங்களில் பரவலாகச் சோதனைகளை அதிகரிக்க வேண்டும், நோய் அடையாளம் கண்டவர்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அனைவரையும் பரிசோதனை செய்து யாருக்கு நோய்த்தொற்று உள்ளதோ அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜூலை மாதம் நோய்த் தொற்று மிக உச்சத்தை எட்டும், என்ற காலகட்டத்தில் ஒரு லட்சம் மேற்பட்ட படுக்கைகளை அரசு தயார் செய்து வைக்க வேண்டும்.

அதேபோல் போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இல்லை, இந்த நேரத்தில் கூட தேவையான அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கும் முயற்சி என்பது தவறானது, இதனால் அரசின் தேவையை ஈடு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல பெருத்த ஊழல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையில், ஜென்டில்மேன் ஏஜென்சி என்று நிறுவனம் மூலம் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமித்து அதன் மூலம் பணி அமர்ந்திருக்கிறார்கள். அதில் மிகப்பெரிய ஊழல் நடக்க வழி வகுத்துள்ளதுள்ளனர். இதனால் அரசின் தேவைகள் பூர்த்தி அடையாது.

இன்னும் சுமுகமான நிலை திரும்பாத நிலையில், மத்திய அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ. 7 ஆயிரத்து 500, மாநில அரசு ரூ 5,000 நிவாரணத் தொகையை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பொதுமக்களின் கையில் பணம் இருந்தால் மட்டுமே பொருட்களை வாங்குவார்கள், வேலையையும், வருமானத்தையும் இழுந்து, பட்டினியாக இருக்கும் பொழுது, மேலும் நெருக்கடிகள் அதிகமாகும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் ரூ12,500 நிவாரணம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அதுபோல் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஏனென்றால் மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கூட கொடுக்காமல் உள்ளது. ஜி.எஸ்.டி. பங்குத்தொகை நமக்குக் கிடைக்க வேண்டியதை வழங்கவில்லை. அதை வழங்க மறுக்கிறார்கள். மாநில அரசு கடன் வாங்க அனுமதி கேட்டால் கூட நாங்கள் சொல்கின்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால்தான் கடன் வழங்க அனுமதி அளிப்போம் என மத்திய அரசு கூறுகிறது.  

மாநில அரசின் கையைக் கட்டி வைத்திருக்கிற நிலையை மத்திய அரசு உருவாகியுள்ளது. இதனால் மாநிலங்களில் நிதி நெருக்கடி அதிகமாக ஏற்பட்டுள்ளது. எனவே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஷ்மீர் முதல் குமரி வரை ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இதற்கு அரசு செவிசாய்க்க வில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் செல்வோம். சென்னையில் கரோனா நோய்த் தாக்குதலில சாவு எண்ணிக்கையைச் சொல்ல தயங்குகிறது. ஏற்கனவே 240 பேர் இறந்தவர்களை. இப்போதுதான் வெளியிடுகிறது. அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.  என்ன உண்மையோ மக்களுக்கு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.
 

http://onelink.to/nknapp


தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அத்தனையும் அரசாங்கம் கையகப்படுத்தி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான செலவைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் காப்பீட்டுத் தொகை மூலமாகவோ, அரசு நிதி மூலமாகவோ நேரடியாக வழங்க வேண்டும், இதைச் செயல்படுத்தினால் தான் சாவு எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனக் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.