
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் "ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம்." என்று அறிவித்தார்.
அரசியல் கட்சி என்ற அளவில் நிர்வாகிகள், தொண்டர்கள் என்ற அளவிலும் இருக்கும் தொடர்புகளை போன்றதல்ல தி.மு.கழக உடன்பிறப்புகளுடனான உறவு. தி.மு.கழகத்தின் கொள்கையும், கோட்பாடுகளையும் வழுவாமல் காத்து நிற்க கூடியவர்கள் தான் தி.மு.கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் அப்படிப்பட்ட உடன்பிறப்புகளை கலைஞர் வழியில், தி.மு.கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து எளிமையாக உரையாட உள்ளார் முதலமைச்சர்.
உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் நாளை ஜூன் 13.06.2025 வெள்ளிக்கிழமை முதல் மூன்று தொகுதிகளில் கழக நிர்வாகிகளை நேரில் சந்திக்கிறார்.