Skip to main content

''ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு''-சட்டமன்றத்தில் துரைமுருகன் பேச்சு!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

'' Butter in one eye and lime in the other '' - Thuraimurugan's speech in the assembly!

 

இன்று சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றிப் பேசுகையில், ''திமுக எதிலேயும் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்காது. எடுத்துவிட்டால் அதிலேயே உறுதியாக நிற்கும். இந்த தீர்மானத்தினுடைய மையக்கருத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இதற்கான குரலை எதிரொலித்தார்கள். அதுமட்டுமல்ல சட்டமன்றத்தில் இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அன்றைக்கு நம்முடைய முதல்வர் 2020 ஜனவரி ஒரு தீர்மானத்தைக் கொடுத்தார். அந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவில்லை. உடனே பிப்ரவரி 7ஆம் தேதி 'நான் ஒரு தீர்மானம் கொடுத்திருக்கிறேனே அது என்ன ஆச்சு' என்று கேட்டார். அன்னைக்கு இருந்த சபாநாயகர் ஆய்வில் இருக்கிறது என்று சொன்னார் .ஒரு சில தினங்களுக்குப் பிறகு நான் எழுந்து என்னாயிற்று என்று கேட்டேன். ஆய்வில் இருக்கிறது என்று சொன்னார். ஆய்வில் இருக்கிறதா அல்லது ஆராய்ச்சியே கிடையாதா எனக் கேலி பேசி விட்டு விட்டு விட்டோம்.

 

பிறகு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஒரு முடிவோடு எழுந்து, எடுத்துக் கொள்கிறீர்களா இல்லையா என்று மிகப்பெரும் வாதத்தைச் செய்து பார்த்தோம். அன்றைக்கும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசை எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் நம்முடைய கொள்கை  வற்புறுத்துவது என்பது வேறு. அதைத் தான் கலைஞர் அழகாகச் சொன்னார். 'உரிமைக்குக் குரல் கொடுப்போம்; உறவுக்குக் கைகொடுப்போம்' நாங்கள் மத்திய சர்க்காரை எதிர்த்துத் தடி தூக்கிக்கொண்டு எதிர்க்கிறோம். இல்லை, ஆனால் எதை எதை ஏற்கிறோமோ  அதை அதை ஏற்கிறோம். எதை எதை எதிர்க்கிறோமோ எதிர்க்கிறோம் கலைஞருடைய பாணியில். இது செக்யூலர் ஸ்டேட் என்று சொல்கிறீர்கள். ஒரு கம்யூனல் ஆர்மி என்று சொல்கிறீர்கள். அரசியல் சட்டத்திற்குக்  குடியுரிமை சட்டம் நேர்மாறாக இருக்கிறது. இப்படி ஒரு அரசியல் சட்டத்தினுடைய கருத்துக்கு மீறி எந்த சட்டமும் இருக்கக் கூடாது அது தான் இந்தியாவின் சட்டமே. இது சிறுபான்மை சமுதாயத்தைப் பாதிக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பதைப் போல், நீ மட்டும் உள்ளே வா நீ வராதே என்று சொல்வது கடைந்தெடுத்த மதவெறிக்குச் சமம். ஆகையால் தான் இந்த திட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியாக இருக்கிற பொழுதும் இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தோம். தேர்தல் அறிக்கையிலும் விடாமல் இந்த கொள்கையை வற்புறுத்தினோம் . ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் நிமிர்ந்து கம்பீரத்தோடு அந்த தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.