Skip to main content

“ஜெயலலிதாவை விட எனது மனைவி 1000 மடங்கு சக்தி வாய்ந்தவர்” - அண்ணாமலை

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

annamalai said My wife is 1000 times more powerful than Jayalalithaa

 

தமிழக பாஜகவில் இருந்து கடந்த சில நாட்களாக பலர் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சிக்கு நல்லது. அப்போதுதான் புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும் என்று அண்ணாமலை பேசியிருந்தார். அப்போது, தானும் ஜெயலலிதா மாதிரி ஒரு தலைவராக செயல்படுகிறேன் என்றார். ஆனால், ஜெயலலிதாவுடன் எப்படி தன்னை ஒப்பிட்டு பேசலாம் என்று கூறி அதிமுக தலைவர்கள் அண்ணாமலையைக் கடுமையாகச் சாடியிருந்தனர். 

 

இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் எப்போது பாஜக ஆட்சிக்கு வரும் என்றே தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். அதனால் யாரும் அதிமுகவில் இருக்கும் தலைவர்கள் அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிட்டு பேசினால் அது சரியானது அல்ல. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. நான் பாஜகவின் தலைவராக இருக்கும் வரை இப்படித்தான் இருப்பேன். என்றைக்கும் மாறமாட்டேன்.

 

எனது கட்சியும் இப்படித்தான் இருக்கும். அப்படி இருந்தால் மட்டும்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். 2026-இல் ஆட்சிக்கு வருவோம். இல்லையென்றால் அதற்கு அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவோம் என்று நான் சொல்ல விரும்பவில்லை. எனது தொண்டர்களையும் அப்படி தவறாக வழிநடத்த விரும்பவில்லை. நமது இலக்கை அடைய வேண்டும் என்றால் அனைத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும். வலி, இரத்தம் என அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். விமர்சனங்களைக் கடந்து செல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு முறையும் அண்ணாமலை வந்து பதிலளிக்க முடியாது. 

 

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வளர்ந்த விதம் வேறு, பாஜக வளர்ந்து கொண்டிருக்கும் விதம் வேறு. அதனால் யார் கருத்து சொன்னாலும் அது அவர்களுடைய கருத்துகள். அதில் சரி, தவறு என்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் நேற்று சொன்ன கருத்தில் இருந்து ஒரு படி கூட பின்வாங்கப் போவதில்லை. நான் ஜெயலலிதாவை யாருடனும் ஒப்பிட்டு பேசவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அரசியலில் ஒரு முடிவு எடுத்தால் தைரியமாக எடுக்க வேண்டும். தவறு நடந்தால் அதற்காகவும் நிற்க வேண்டும். ஜெயலலிதா துணிந்து தைரியமாக முடிவு எடுத்தார்கள்.

 

ஜெயலலிதாவிற்கு ஒரு தேர்தலில் டெபாசிட் போனது. அதற்காக அவர் பின்வாங்கவில்லை. துணிந்து நின்று அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார். அதுதான் தலைவர். நானும் அப்படிப்பட்ட பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தைரியமாக எடுக்கும் முடிவை துணிந்து எடுத்து வருகிறேன் என்று சொல்வதற்காகத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். பாஜக ஆட்சிக்கு வரும் காலம் வந்துவிட்டதாக உறுதியாக நம்புகிறேன். நான் என்னை யாருடனும் ஒப்பிட்டு பேச விரும்பவில்லை. அந்த அவசியம் எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை எனது அம்மா ஜெயலலிதாவை விட 10 மடங்கு சக்திவாய்ந்தவர். எனது மனைவி 1000 மடங்கு சக்தி வாய்ந்தவர். ஒப்பீடு அதுவல்ல, ஒரு கட்சியின் தலைவராக அப்படி ஒரு எடுத்துக்காட்டு கொடுத்தேன்” என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.