Skip to main content

கட்சியினரை ஓரம் கட்டும் அ.ம.மு.க. மாநில நிர்வாகி!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

ddd

 

தமிழக தோ்தல் திருவிழா நடந்து முடிந்த நிலையில், வேட்பாளர்களின் 25 நாட்கள் சூறாவளி பிரச்சாரத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. அதில், மிக முக்கியமான தொகுதிகள் பட்டியிலில் அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. 

 

அதில், திருச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிழக்கு தொகுதியில் கவனம் செலுத்தபட்டது. இங்கு திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டி நடைபெற்றது. இதில் அமமுகவின் கழகப் பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான ஆர்.மனோகரன், தோ்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் கட்சி தொண்டா்கள் யாரும் இல்லாமல் தப்பு அடிக்கும் நபா்களோடு மட்டுமே வாக்கு சேகரித்ததாக தகவல் கிடைத்தது. 

 

அதற்கான காரணம் குறித்து விசாரித்ததில், அமமுகவின் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த ஜெ.சீனிவாசன், தோ்தல் அறிவிப்புக்கு ஓரிரு நாட்கள் இருக்கும்போது, வெல்லமண்டி நடராஜன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திடீர் கட்சித் தாவலுக்கு ஆர்.மனோகரனும் ஓர் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் சுமுகமான உடன்பாடு இல்லாததாலும், சீனிவாசன் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதாலும் இந்தக் கட்சித் தாவல் நடந்ததாக சொல்லப்படுகிறது.

 

இதுஒருபுறம் இருக்க, தற்போது ஜெ.சீனிவாசன் இல்லாத நிலையில், அவா் வகித்த மாநகர் மாவட்டக் கழகச் செயலாளா் பொறுப்பு காலியாக உள்ளது. அதோடு, அதன் பொறுப்பாளராக ஆா்.மனோகரனே கண்காணித்து வருகிறார். ஆனால், தற்போது அவா் கட்சிக்காரா்களை அருகில் சோ்ப்பது இல்லை என்றும், கட்சியில் இருக்கும் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்து பாகுபாடு காட்டுவதோடு, காலியாக உள்ள மாநகர் மாவட்டக் கழகச் செயலாளா் பொறுப்பை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல், அவரே வைத்துள்ளதாகவும் கட்சியினா் புலம்புகின்றனா். 

 

எல்லா பதவிகளையும் அவரே வைத்துக்கொண்டால் நாங்கள் எதற்கு அவருக்கு உழைக்க வேண்டும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளனா். மாநகர் மாவட்ட பொறுப்பை இவர் வைத்துக்கொண்டிருக்கிறார். ஏன் கட்சியில் அதற்கு தகுதியான ஆட்கள் இல்லையா? என்றும், அவா் மாநில அளவில் பொறுப்பில் இருக்கும்போது ஏன் இதை விட்டுத்தரக்கூடாது? என்றும் கட்சியினர் முணுமுணுத்துள்ளனா்.

 


இதன் வெளிப்பாடுதான் தோ்தல் சமயத்தில் பலர் தோ்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும், அதிலும் கடைசிநாள் கட்சியனா் யாரும் செல்லாமல், வேட்பாளராகிய ஆர்.மனோகரனும், தப்பு அடிக்கும் குழுவும் மட்டுமே வாக்கு சேகரிக்க சென்றுள்ளனா். “அவா் வெற்றிபெற நாங்கள் ஏன் எங்களுடைய உழைப்பை வீணடிக்க வேண்டும். கட்சியில் உழைப்பதே, நமக்கு நாளை ஒரு நிலையான பதவி கிடைக்கும் என்பதற்காகதான், அப்படி இருக்கும்போது இவா் மட்டுமே அந்தப் பதவியையும் வைத்துக்கொள்வது முறையற்றது. எனவே ஆா்.மனோகரனுக்கு எதிரான எங்களுடைய எதிர்ப்பை தோ்தல் பிரச்சாரத்தில் காட்டியுள்ளோம்” என்று அமமுகவினா் புலம்பி தீா்க்கின்றனா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.