Skip to main content

நடுரோட்டில் திருமண நாள் கொண்டாட்டம்... தட்டிக் கேட்டவர் படுகொலை! 

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Wedding day celebration in the road.. one passes away

 

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள மூர்த்தி நகர், முதல் தெருவில் குடியிருக்கும் சங்கர் - ரமணி தம்பதிக்கு நேற்று முன்தினம் திருமண நாள். இவர்களின் திருமண நாளை முன்னிட்டு ரமணியின் தம்பி அம்மா நகரைச் சேர்ந்த ராஜா, தனது நண்பர்களுடன் மூர்த்தி நகருக்குச் சென்று இரவு 9.30 மணியளவில் தனது சகோதரியின் திருமண நாளை வீட்டின் எதிரே சாலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இளைஞர்கள் மது போதையில் இருந்துள்ளனர். 

 

இதனை எதிர்வீட்டைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சதீஷ் (எ) மணிகண்டன்(26), அவரது நண்பர்கள் சபரி, ஹரி, ராஜவேல் ஆகியோர் 'சாலையோரமாக கொண்டாட வேண்டியது தானே..' என ரமணி - சங்கர் மற்றும் அவரது நண்பர்களிம் கேட்டனர்.  இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகே இருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ரமணியின் தம்பி ராஜா, அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் அன்று இரவு 10.45 மணியளவில் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூர்த்தி நகருக்குச் சென்று, தனது வீட்டின் எதிரே மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த மணிகண்டனைச் சரமாரியாகத் தாக்கி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கத்தியால் குத்தி விட்டு தப்பித்துச் சென்றனர்.

 

ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனை அப்பகுதியினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மணிகண்டன் நள்ளிரவு 12 மணியளவில் உயரிழந்தார். மணிகண்டனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

 

இதனிடையே மணிகண்டன் கொலை தொடர்பாக 5 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து கொலை வழக்கில் தொடர்புடைய அம்மாநகர் ராஜா, கண்டமங்கலம் அசார், கணுவாப்பேட்டை புதுநகர் தமிழ்ச்செல்வன், மூர்த்தி நகர் சங்கர், அவரது மனைவி ரமணி உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

Wedding day celebration in the road.. one passes away

 

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று பகல் 2 மணி அளவில் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட மணிகண்டனின் உடலை உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வாங்க மறுத்தனர். கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட மணிகண்டன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலை மூர்த்தி நகரில் மறியலில் ஈடுபட்டனர். 


போராட்ட இடத்திற்கு வந்த புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ மற்றும் எஸ்.பி ரங்கநாதன் ஆகியோர் உறவினர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து 3 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.