Skip to main content

விதிகளை மீறிய இந்திய விமான நிறுவனம் - தற்காலிக தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்!

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

indigo

 

இந்திய விமான நிறுவனமான இண்டிகோவின் விமானங்கள், தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு ஐக்கிய அரபு அமீரகம்ஒருவாரம் தடை விதித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வோர் இரண்டு முறை கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக முதல் கரோனா பரிசோதனையையும், பயணம் செய்துகொள்வதற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இரண்டாவது கரோனா பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி கரோனா பரிசோதனை செய்துகொள்ளாத பயணிகளையும் இண்டிகோ விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றி சென்றதனால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இண்டிகோ விமான நிறுவனம் மறைமுகமாக இந்த தடையை உறுதி செய்துள்ளது. விமானங்களை இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் செல்லும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ஆகஸ்ட் 24, 2021 வரை ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனம் முதலில் கூறியது.

 

ஆனால் தற்போது, இண்டிகோவின் செய்தித்தொடர்பாளர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல், இண்டிகோ விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான ஓடுதளத்தில் உணவருந்திய பயணிகள்; இண்டிகோ நிறுவனத்துக்கு அபராதம்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Penalty for Indigo for Passengers eating on the runway

டெல்லியில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று கடந்த 16ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அன்றைய தினத்திற்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. 

ஆனால், இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்துக்கும், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி மற்றும் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

Next Story

லேட்டான விமானம்; ஓடுதள பாதையிலேயே ரெஸ்ட் எடுத்த பயணிகள்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Late Flight; Passengers who took rest on the runway

டெல்லில் இருந்து கோவாவிற்கு சென்ற விமானம் தாமதமாக சென்ற நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் விமானத்தின் அருகேயே கூட்டமாக அமர்ந்து உணவு அருந்தியதோடு,  விமான ஓடுதள பாதையின் அருகே ரெஸ்ட் எடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்றைக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.