Skip to main content

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மருத்துவமனையில் அனுமதி

Published on 15/01/2019 | Edited on 15/01/2019
r

 

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உடல்நலக்குறைவுக்கு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 

நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவிசங்கர் பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரஸ் தலைவர்கள் வடக்கு, தெற்கு என நாட்டைப் பிரிக்கத் தொடங்கிவிட்டனர்” - பா.ஜ.க எம்.பி. காட்டம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

BJP MP says Congress leaders are starting to divide the country into North-South

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல்,  கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேவந்த் ரெட்டி இன்று (07-12-23) பொறுப்பேற்றுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரேவந்த் ரெட்டி, ‘பீகார் டி.என்.ஏ.வைவிட தெலுங்கானா டி.என்.ஏ. சிறந்தது’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு அப்போது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத், ரேவந்த் ரெட்டிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரவிசங்கர் பிரசாத், “நாட்டை பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் வினோத திட்டம் தீட்டி வருகின்றனர். நாட்டை, வடக்கு- தெற்கு என பிரிக்க தொடங்கிவிட்டனர். பீகாரின் டி.என்.ஏ.வைவிட எங்களுடைய டி.என்.ஏ சிறந்தது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருந்தார். ஆனால், அது குறித்து சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ரேவந்த் ரெட்டியும் தனது கருத்தை திரும்பப் பெறவில்லை” என்று கூறினார்.

Next Story

"ஒளிப்பதிவு வரைவு மசோதாவைத் திரும்பப் பெறுக"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

tamilnadu chief minister mkstalin writes letter for union minister

 

ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06/07/2021) கடிதம் எழுதியுள்ளார்.
 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (06/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அண்மையில் மத்திய அரசு, 1952- ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை, வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 என வெளியிட்டுள்ளது. இந்த வரைவுச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளத் திருத்தங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board Of Film Certification) மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் உள்ளதால், இந்த வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவைத் திரும்பப் பெறுமாறும், இது தொடர்பான முயற்சிகளை கைவிடுமாறும் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்".  இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.