Skip to main content

"நமது எதிர்காலம் இளைஞர்களுக்கு வழங்கப்படும் கல்வியைப் பொறுத்தது" - பிரதமர் மோடி உரை!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

narendra modi

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. தொடர்ந்து அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதலளித்தது. இந்தநிலையில் மத்திய அமைச்சரவை,  புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதலளித்து ஒரு வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

 

அப்போது அவர், புதிய கல்வி கொள்கை, நாடு தங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற உறுதியை மாணவர்களுக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு: 


புதிய கல்விக் கொள்கை ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதையொட்டி, அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். தொற்றுநோய்க்கு மத்தியிலும், லட்சக்கணக்கான குடிமக்கள், ஆசிரியர்கள், தன்னாட்சி அமைப்புகளின் பரிந்துரைகளாலும், பணிக்குழுவை நியமித்ததன் மூலமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

நமது எதிர்காலம் இளைஞர்களுக்கு வழங்கப்படும் கல்வியைப் பொறுத்தது. நம் நாட்டின் இளைஞர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். இந்த புதிய கல்விக் கொள்கை, நாடு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற உறுதியைஇளைஞர்களுக்கு அளிக்கும். இப்போது தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டம், நமது இளைஞர்களை எதிர்கால நோக்குடையவர்களாக ஆக்கும். செயற்கை நுண்ணறிவால் உந்தப்படும் ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வழியை ஏற்படுத்தும்.

 

பொறியியல் பாடத்திட்டத்தை 11 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ஒரு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் விரைவில் பொறியியல் படிப்பை தொடங்கப்போகின்றன என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் முறையாக, இந்திய சைகை மொழிக்கு ஒரு மொழி பாடத்தின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இப்போது மாணவர்கள் இதை ஒரு மொழியாகவும் படிக்க முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

பிரதமர் மோடி இந்த நிகழ்வில் தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு பாடத்தை இணையத்தில் நடத்துவது உள்ளிட்ட சில திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.