Skip to main content

''இந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்துள்ளது''-மத்திய அமைச்சரைச் சந்தித்தபின் எம்.பி திருச்சி சிவா பேட்டி!

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

 '' This news has brought happiness '' - Trichy Siva MP interview after meeting the Union Minister!

 

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் அங்குள்ள தமிழ் மாணவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் 3 எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட குழுவை உக்ரைனின் எல்லை மற்றும் அண்டை நாடுகளுக்கு அனுப்பி தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன்  திமுக எம்.பி திருச்சி  சிவா உள்ளிட்ட 10 பேர் கொண்ட தமிழக சிறப்பு குழு சந்திப்பு மேற்கொண்டு உக்ரைனின் எல்லை மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரியது. இதுவரை தமிழகத்தை சேர்ந்த 777 மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களையும் விரைந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகத்தின் சிறப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

 

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி திருச்சி சிவா, ''அங்கிருந்து வெளியே வருவதற்கு இரண்டு மார்க்கங்கள் இருக்கிறது. பேருந்தில் வர 500 டாலர், ரயிலில் வருவதென்றால் இலவசம். ரயில் உள்நாட்டு மக்களுக்காகஇயக்கப்படுகின்ற காரணத்தால் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 20 பேர் மட்டும்தான் அதில் செல்ல முடியும். இதனால் இந்திய மாணவர்கள் எந்த பாகுபாடும் பார்க்காமல் யார் முதல் 20 பேர் இரண்டாம் 20 பேர் என முடிவெடுத்து மிக ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. அதேபோல் விமானத்திலும் அனைத்து மாநில மாணவர்களும் பாகுபாடின்றி அழைத்து வரப்படுகிறார்கள். மாணவர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. அங்கு மாணவர்கள் மீட்கப்படுவதில் மொழிப் பாகுபாடு இருப்பதாகப் புகார்கள் இருந்த நிலையில் இந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

2023-24 டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
2023-24 TASMAC Income Increase

தமிழகத்தில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45,885.67 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (21.06.2024) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் மாலை நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஆயத்தீர்வை துறைக்கு கீழ் இருக்கக்கூடிய டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்திருக்க கூடிய வருவாய் தொடர்பான பட்டியல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கொள்கை விளக்க குறிப்பில் கிடைத்துள்ள தகவலின்படி 2023-24 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45,855.67 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட 1734.54 கோடி ரூபாய் கூடுதலாக டாஸ்மாக் வருமானம் கிடைத்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Next Story

கள்ளச்சாராய மரணம்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
counterfeiting liquor case ; CM consults with all District Collectors

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதல்வரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனையில்  மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து வருகிறார்.