Skip to main content

இது என்னுடைய கடைசித் தேர்தல் - கட்சியினரை கலங்கவைத்த நிதிஷ்குமார்!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

kl;

 

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். 17 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில், 1,463 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள்.

 

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் கட்டத் தேர்தலில், சுமார் 2.86 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும், 53 சதவீத வாக்குகளே பதிவாகியது. இரண்டாம் கட்டத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 46 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 56 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும் போட்டியிட்டன. இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 7 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான பிரச்சாரத்தில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், இந்தத் தேர்தலே தனக்குக் கடைசி தேர்தல் எனவும், இதற்கு மேல், தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது அக்கட்சியினரை வருத்தமடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Confidence vote in Bihar Assembly today

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று (12.02.2024) நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதே சமயம் பா.ஜ.க. 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 4, ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என பாஜக கூட்டணி அரசுக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டின் முன்பு நேற்று இரவு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாட்னா திரும்பினர். தேஜஸ்வி யாதவ் வீட்டில் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சேட்டன் ஆனந்த் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு தான் விருப்பப்பட்டே இங்கு தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Next Story

நிதிஷ் வெளியேறியது இ.ந்.தி.யா. கூட்டணிக்கு சாதகம்?

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Nitish's exit Advantage of INDIA alliance?

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் சில முரண்பாடு இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. மேலும் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த சூழலில் குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் நிதிஷ்குமார் மட்டுமே பங்கேற்றிருந்தார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை. கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாகத்தான், தேஜஸ்வி பங்கேற்கவில்லை என்று பலரும் பேசி வந்தனர். தேஜஸ்வி யாதவ் தேநீர் விருந்தில் பங்கேற்காதது குறித்து, முதல்வர் நிதிஷ்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, யார் வரவில்லையோ அவர்களிடம் தான் இது குறித்து கேட்க வேண்டும் என்று பதிலளித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பாக, நாங்கள் மகா கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தான், நிதிஷ்குமார்  ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்பு அடுத்த நாளே பாஜக கூட்டணியுடன் இணைந்து முதல்வராக மீண்டும் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி இருந்தது. நிதிஷ்குமார் பாஜகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் பீகாரின் முதல்வர் நான்தான் என்று நிபந்தனை வைத்ததாகவும், அதற்கு பாஜக ஒப்புக்கொண்டு மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் மற்றும் சபாநாயகர் பதவி இந்த மூன்றையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பீகாரில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேற்று காலை 10 மணியளவில் சந்தித்து பேச முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பின் போது பீகார் ஆளுநரிடம் தனது ராஜினமா கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. மேலும் பாஜக கூட்டணிக்கு நிதிஷ் குமார் மாறி பாஜக ஆதரவுடன் அன்றைய தினமே முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. அதேபோல், அனைத்தும் நடந்தேறியது. 

காலை பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன்" என தெரிவித்தார். 

அதே சமயம் இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தன. அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சந்தர்ப்பவாதமாக தன்னை இணைத்துக்கொண்ட இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் துரோகம் இழைத்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. இதையடுத்து, பல்டிராம் என நிதிஷ்குமாரை பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பார்க்கப்பட்ட நிதிஷ்குமார், பதவிக்காக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது பீகார் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, நிதிஷ்குமார் ஆட்சியின் கடைசி ஒன்றரை வருடத்தை தேஜஸ்வி யாதவுக்கு விட்டுத் தரவேண்டும். அதன்படி அவர் பதவியைக் கொடுக்க மனம் வராததால், இந்த முடிவை பாஜகவின் துணைகொண்டு செய்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் தெளிவான தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அண்டை மாநிலமான பீகாரில் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியிருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் எனச் சொல்லப்பட்டது. 

ஆனால், அரசியல் விமர்சகர்கள் சிலர், அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை. நிதிஷின் இந்த முடிவு உண்மையில் இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு நிம்மதியைத் தான் ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் இன்னும் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதனால் கட்சிக்கரர்களுக்கு நிறைய சீட் வழங்கி உற்சாகப்படுத்த முடியும். எதிரிகள் ஓரணியில் திரண்டுள்ளனர். லாலுவுக்கு இருக்கும் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் நிதிஷுக்கு சற்று குறைவுதான். லாலு இந்தியா கூட்டணியில் இருப்பதுதான் கூடுதல் பலம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் லாலுவின் மனைவியும் முன்னாள் பீகார் முதல்வருமான ராப்ரிதேவி இல்லத்தில் ஆர்ஜேடி MLAக்கள் கூடி, அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.