Skip to main content

சபரிமலையில் அதிகாலையில் போலீசாரை துரத்திய காட்டுப்புலி!

Published on 08/12/2019 | Edited on 08/12/2019

சபரிமலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்து கொண்டே உள்ளது. அதற்கேற்றார் போல் பக்தர்களுக்கு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கேரள மாநில அரசும், தேவசம் போர்டும் செய்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (07.12.2019) அதிகாலையில் சன்னிதானம் பின்பக்கம் பெயிலிபாலம் பன்னிக்குழி அருகில் இரண்டு காவலர்கள் பாதுகாப்பில் நின்று கொண்டியிருந்தனர். அப்போது இருட்டில் பன்னிக்குழியை நோக்கி புலி ஓன்று பதுங்கி நடந்து வருவதை பார்த்த போலீசார் கையில் இருந்த டார்ச் லைட்டை புலியை நோக்கி அடித்தனர். ஆனால் புலி அந்த டார்ச் வெளிச்சத்தையும் பொருட்படுத்தாமல் முன்னே நோக்கி வந்து கொண்டியிருந்தது. இதனால் அலறியடித்து கொண்டு போலீசார் ஓட்டம் பிடித்தனர்.

kerala sabarimalai forest tiger with police

பின்னர் அந்த போலீசார் அரவணை பிளான்ட்டின் பின் பக்கம் பாதுகாப்பில் நின்று கொண்டியிருந்த சி.ஆா்.பி.எப் படை வீரர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புலியை அங்கிருந்து துரத்தினார்கள். சபரிமலை சீசன் முடிந்ததும் பன்னிக்குழியில் உள்ள கழிவுகளை சாப்பிடுவதற்காக பன்றிகள் அங்கு வருவது வழக்கம். அந்த நேரத்தில் புலி பன்றிகளை வேட்டையாட வருவதும் வழக்கமாக உள்ளது. ஆனால் அந்த எல்லையை தாண்டி எந்த விலங்குகளும் உள்ளே வருவது இல்லை. 

தற்போது இந்த ஆண்டு அந்த பகுதியில் சீசன் நேரத்திலும் புலி நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் வனத்துறையினர் வகுத்துள்ள எல்லையை தாண்டி காட்டு பகுதியில் செல்லக்கூடாது என்று பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்லும் பக்தர்களிடம் எச்சரித்து உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.