Skip to main content

100 முஸ்லீம் பள்ளிவாசல்களை வடிவமைத்துக் கட்டிய இந்து மத கிருஷ்ணன்..

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Kerala Krishnan who build 100 Mosque

 

மதத்தின் பெயரால் சில மனிதர்கள் வேறுபட்டு நிற்கும் இந்தச் சூழலில், கேரளா ஆலப்புழாவில் உள்ள ஒரு இந்து கோயிலில் பூஜைகள் நடக்கும்போது முஸ்லீம் ஒருவர், மேளம் வாசிக்கும் முறை பலரையும் வியக்க வைத்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற கோபாலகிருஷ்ணன், 100 முஸ்லீம் பள்ளிகளை வடிவமைத்துக் கட்டியிருப்பது அனைத்து தரப்பினராலும் கவரப்பட்டுள்ளது.

 

திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷனில் "கடவுள் சன்மானம்" என்ற பெயர் கொண்ட இல்லத்தில் வசிக்கும் கிருஷ்ணனுக்கு வயது 84. பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லீம் மதத்தினர் அவரின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், கேரளாவில் 100 பள்ளி வாசல்களை வடிவமைத்துக் கட்டியதோடு மட்டுமல்லாமல் அங்கு புகழ்பெற்ற திருவனந்தபுரம் பீமா பள்ளியும், சபரிமலை எருமேலி வாவர் மசூதியையும் வடிவமைத்து அவர் கட்டியதையும் நினைவு கூர்கின்றனர் மக்கள்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது; 1966-ல் என்னுடைய 18 வயதில் பீமா பள்ளியை வடிவமைத்து அதைக் கட்டி முடிக்கும் பொறுப்பை முஸ்லீம் பெரியவர்கள் என்னிடம் நம்பிக்கையோடு கொடுத்தனர். 18 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட அந்த பள்ளி அங்கு வரும் முஸ்லீம் மற்றும் இந்து, கிறிஸ்தவர்களால் காணிக்கை கொடுக்கப்பட்ட பணத்தில் கட்டப்பட்டது. அதனால் இன்றைக்கு லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகளோடு மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் அந்த பள்ளிக்குச் செல்கிறார்கள்.

 

அந்தப் பள்ளி கட்டும்போது அருகில் உள்ள விமான நிலைய நிர்வாகம் தடுத்தது. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் அதிக உயரமான 132 அடி உயரத்தில் ஸ்தூபி கட்டப்படுவதால் விமானம் தரையிறங்கும் போது இடையூறு இருக்கும் என்று கருதினார்கள். பின்னர் அவர்கள் கொடுத்த 3 ஒப்பந்தங்களான பள்ளிக்குப் பச்சை வர்ணம் பூசக்கூடாது, அதற்கு பதில் சிவப்பும் வெள்ளையும் தான் பூச வேண்டும். அதுபோல் ஸ்தூபியின் மீது சிவப்பு மின் விளக்கு பொருத்தப்பட வேண்டும். மேலும் கால பருவநிலை மாற்றத்தின் போது விமான நிலைய நிர்வாகம் கேட்டுக் கொள்ளும்படி ஸ்தூபியின் விளக்குகளைப் போடவும் நிறுத்தவும் செய்ய வேண்டும் என்றனர். அதுபோல் தான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.

 

அதே போல் சபரிமலைக்குச் செல்லும் லட்சக் கணக்கான பக்தர்கள் முதலில் எருமேலியில் உள்ள வாபர் மசூதிக்குச் சென்று தரிசித்துவிட்டுச் செல்வார்கள். இது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக இருப்பது பெருமையாக உள்ளது. இதே போல் பாளையம் ஜூம்மா மஸ்ஸீத் பள்ளி வாசல், கருநாகபள்ளியில் தாஜ்மஹால் மாதிரி கொண்ட பள்ளி வாசல் எனக் கேரளா முழுவதும் என் கைவண்ணத்தில் உருவான அந்த பள்ளிகளைப் பார்க்கும் போது பெருமையாகவும் மகிழ்சியாகவும் உள்ளது.

 

இதற்காக நான் கட்டடம் சம்பந்தமாக இன்ஜினியரிங் படிப்பு எதுவும் படிக்கவில்லை. வெறும் 10-ம் வகுப்பு தான். என் மனதில் தோன்றியதை கை விரல்கள் மூலம் வடிவமைத்தேன். 2 ஆண்டுகளுக்கு முன் ஆராட்டு முள பள்ளி வாசலை வடிவமைத்துக் கட்டியது தான் என் கடைசி பணி, என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.