Skip to main content

தண்ணீர் குடிக்க மறுக்கும் ஹர்திக் படேல்... 7-வது நாளாக நீடிக்கும் உண்ணாவிரதம்...

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

 

hardik paDEL

 

 

 

படிதார் அனாமட் அண்டோலன் சமிட்டி என்ற கட்சியின் தலைவரும் படிதார் இன மக்களின் உரிமைகளுக்காகக் போராடுபவருமான ஹரிதிக் படேல் தொடர்ந்து 7-வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது நீர் அருந்த மறுப்பதால் அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

 

படிதார்  இன மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தது கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ஹரிதிக் படேல்

 

குராஜத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கனு கல்சரியா, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அர்ஜுன் மோத்வாடியா, எம்.எல்.ஏ விக்ரம் மதன் ஆகியோர் இன்று நேரில் சென்று தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் 7-வது நாளாக உணவு உண்ணாமல் இருந்த ஹர்திக் தற்போது நீர் அருந்தவும் மறுப்பதால் அவரது உடல் நிலை மோசமாகி உள்ளது. எனவே அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அவரது உண்ணாவிரதம் வெற்றிபெரும் காந்தி வழியில் வெற்றிபெறுவார் எனவும் அவருக்கு ஆதரவு கருத்துக்கள் குவிந்துவருகிறது. 

சார்ந்த செய்திகள்