Published on 10/02/2023 | Edited on 10/02/2023

உலக அளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி 14-ஆம் தேதி பசு அணைப்பு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்திருந்தது. சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பானது ட்ரோல் செய்யப்பட்டதோடு, பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்களும் எழுந்தன. ஏராளமான விமர்சனங்கள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், பசு அணைப்பு தின அறிவிப்புக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து அதனைக் கைவிடுவதாக விலங்குகள் நல வாரியம் தற்போது அறிவித்துள்ளது.