Skip to main content

அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை... கையைப் பிசையும் கர்நாடகா!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

df

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்துவந்த கர்நாடகாவில் தற்போது அதிரடியாகக் கரோனா பரவி வருகின்றது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டும் அம்மாநில அரசால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கர்நாடகாவில் இன்று மேலும் 9,366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,94,356 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 93 பேர் கரோனா காரணமாக மரணமடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்