Skip to main content

வேலைக்கு வரவே பயமா இருக்கு... குறிவைத்து அடிக்கும் கரோனா - நடுங்கும் காவலர்கள்!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

hjk


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 


இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று  11,088 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,35,601 ஆக அதிகரித்துள்ளது. இதில் காவல்துறையினர் மட்டும் 11,392 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 121 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில், காவல்துறையினரை கரோனா குறிவைத்து அடிப்பதாக அந்த மாநில போலிசார் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்