Skip to main content

காதலர்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து! 

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Congratulations on giving a bouquet to lovers!

 

பிப்ரவரி 14, உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழித்திட ஓர் வாய்ப்பாக உள்ள காதலை போற்றுவோம், மனிதர்களாக  மாற்றம் பெறுவோம் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி பாரதி பூங்கா, கடற்கரை பகுதிகளுக்கு வருகை தந்த காதலர்களுக்கு பூங்கொத்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்ச்சியில், தந்தை பெரியார் தி.க. புதுச்சேரி தலைவர் வீர.மோகன், துணைத்தலைவர் ம.இளங்கோ, செயலாளர் செ.சுரேஷ், பொருளாளர் இரா. பெருமாள், இளைஞரணி தலைவர் சி.சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் சு.ஜெகன், மகளிரணி தலைவர் ஆ.சுகந்தி, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை அதிகரிப்பு!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Ahead of Valentine's Day, rose prices increase

காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை பிப். 14 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் காதலர்கள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். குறிப்பாக ரோஜா பூக்களை காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு கொடுத்து அழகு பார்ப்பார்கள். ரோஜா பூக்களை அன்பின் வெளிப்பாடாகப்  பார்க்கின்றனர். இதனால் சாதாரண நாட்களை விடக் காதலர் தினத்தை ஒட்டி ரோஜா பூக்கள் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்து வருகிறது. 

பொதுவாக பெங்களூர், ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இருந்து ரோஜாக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இன்று பெங்களூர், ஓசூரில் இருந்து ஈரோட்டுக்கு ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. மஞ்சள், சிவப்பு, பேபி பிங்க், டார்க் பிங்க், வெள்ளை, ஆரஞ்சு போன்ற கலர்களில் ரோஜா பூக்கள் இருக்கும். 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டாக பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. 

கடந்த வாரம் 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100 முதல் ரூ.180 வரை விற்பனையானது. தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்பனையாகி வருகிறது. பொதுவாக ஈரோடு மார்க்கெட்டிற்கு 2000 முதல் 2500 கட்டுகள் வரை ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் இன்று 4000 கட்டுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சில்லறை விலையில் ஒரு ரோஜா 20 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளை காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story

காதலர் தினம்; ரோஜா பூக்களின் விலை 4 மடங்கு உயர்வு

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Rose prices rise on Valentine's Day

 

நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர்கள் தங்களுக்குள் அன்பையும், பாசத்தையும் பகிர்ந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். அதிலும் காதலன் தன் காதலிக்கு எத்தனையோ விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்தாலும் அதில் ரோஜாவுக்கு என்று தனி இடம் உண்டு. 

 

இந்த நிலையில்தான் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை ஏகத்துக்கும் உயர்ந்துள்ளது. அத்துடன் காதலர் தினத்திற்காக ஓசூர், ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பூ மார்க்கெட்டிற்கு ரோஜா பூக்கள் குவியத் தொடங்கியுள்ளது. மேலும் காதலர் தினத்தை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் ஸ்டெம் ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒரு ஸ்டெம் ரோஜா பூக்கள் கட்டு ரூ. 150க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 500 வரை ஒரு கட்டு விலை அதிகரித்துள்ளது. மேலும் மற்ற ரோஜா பூக்களும் வழக்கத்திற்கு மாறாக விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.