Skip to main content

“பொது சிவில் சட்டம் அவசியம்” - பிரதமர் மோடி 

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

“Common Civil Code is a must” - PM Modi

 

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலையும் வரும் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு காங்கிரஸ், பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளும் தீவரமாகச் செயல்பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பெரும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை நோக்கி பிரதமர் மோடி தலைமையில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, “பாஜக உலகத்திலேயே மிகப் பெரிய கட்சியாக மாறியதற்கான முக்கிய பங்காக இருந்தது மத்தியப் பிரதேசம் மாநிலம் தான். நாங்கள் மற்றவர்களைப் போல ஏ.சி அறையில் இருந்து கொண்டு உத்தரவு பிறப்பிப்பவர்கள் அல்ல. மக்களோடு மக்களாக கடும் வானிலையிலும் அவர்களோடு சேர்ந்து பணியாற்றுபவர்கள். இந்த நாடு நன்றாக இருந்தால் தான் நாம் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஒரு சிலர் தங்களுடைய கட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும்  என்று நினைக்கிறார்கள். கட்சி நன்றாக இருப்பதன் மூலம் லஞ்சம், ஊழல் என்று பணத்தை சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள்.

 

அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் வகையில் பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்றமும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், வாக்கு வங்கிக்காக மட்டும் அரசியல் நடத்தும் சில அரசியல்வாதிகள் இந்த பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.அவர்கள் மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதற்கும், இஸ்லாமிய மக்களைத் தூண்டி விடுவதற்கும் தான் இந்த சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். தங்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் ஆதாயம் அடையும் அரசியல்வாதிகள் யார் என்பதை இஸ்லாமிய மக்கள் விரைவில் கண்டு கொள்ள வேண்டும். 

 

ஒரு வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஒரு சட்டம், வேறு ஒருவருக்கு ஒரு சட்டம் என்று இருந்தால் அந்த வீட்டை நடத்த முடியுமா? அதே போல், இரண்டு வகையான சட்டங்கள் நாட்டில் இருந்தால் நாட்டை எப்படி சீராக நடத்த முடியும். அரசியல் சட்டத்தில், எல்லாருக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அனைவருக்கும் பொதுவான இந்த பொது சிவில் சட்டம் அவசியமாக உள்ளது. பொது சிவில் சட்டத்தை எதிர்த்ததை போல், சிலர் முத்தலாக் முறையை ஆதரித்தார்கள். அதன் மூலம், இஸ்லாமிய மக்களுக்கு பெரும் அநீதியை இழைக்கிறார்கள்.

 

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் எகிப்து நாட்டில் 80 ஆண்டுகளுக்கு முன்னரே முத்தலாக் முறையை நீக்கினார்கள். பாகிஸ்தான், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் இதர நாடுகளில் கூட முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு அங்கமாக முத்தலாக் இருந்தால் அதை ஏன் அவர்கள் தடை செய்ய வேண்டும். முத்தலாக் முறை அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் அநீதியை இழைப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து இஸ்லாமிய குடும்பமும் இதனால் சீரழிகிறது.

 

சமீப காலமாக ‘உத்தரவாதம்’ என்ற சொல் பிரபலமாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் கூறும் உத்தரவாதம் ஊழலுக்கு மட்டும் தான் உத்தரவாதம் கொடுப்பார்கள். ஆனால், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.