Skip to main content

உயிர் தப்பிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி! விமான நிலையத்தில் பரபரப்பு!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

இன்று காலை நாக்பூர் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உட்பட பல பயணிகளும் பயணிக்க இருந்தனர். இன்று காலை பயணிகளை அழைத்து கொண்டு ரன் வே-இல் விமானம் சென்றுகொண்டிருக்கும் போது பறக்க முயற்சி செய்தபோது, அதை ஓட்டிச்சென்ற பைலட் விமானத்தில் ஏதோ கோளாறு இருப்பதை உணர்ந்துள்ளார்.

  bjp

இதனால் உடனடியாக விமானத்தை பைலட் தரை இறக்கி மீண்டும் நாக்பூர் விமான நிலையத்திற்கு உள்ளேயே எடுத்துச் எடுத்துச் சென்றார். அதன் பிறகு பயணிகள் கீழே பத்திரமாக இரக்கப்பட்டு, விமான நிலையத்திற்குள் உள்ள தனி அறையில் அமர வைத்தனர். அப்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் பத்திரமாக தங்க வைக்கப்பட்டார். பைலட் சரியான நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை கண்டுபிடித்ததால் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். இதனால் நாக்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

சார்ந்த செய்திகள்