Published on 20/04/2019 | Edited on 20/04/2019
மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் பலர் தங்களின் தொகுதியில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி இந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
![rahul gandhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/N44G9HY8NziJF9nTjaDDQ_9e2yQmhpDlj6HVMMk00hs/1555747936/sites/default/files/inline-images/rahul-gandhi_17.jpg)
ராகுல் காந்தியின் தொகுதி என்று அறியப்படும் அமேதி தொகுதியிலும், கேரளா வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ராகுல் காந்தி அளித்த வேட்பு மனு தாக்கலில் அவருடைய கல்வி விபரங்கள் அனைத்தும் தவறாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கல்வி குறித்த சான்றிதழ்களில் தவறான தகவல்களை அளித்துள்ளதால் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் முக்தி கட்சி புகார்.