Skip to main content

வெகுவாக குறைந்த கரோனா பாதிப்பு... மீளும் ஆந்திரா!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020
fd

 

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில் அடுத்தடுத்த நாட்களில் கரோனா மின்னல் வேகத்தில் பரவியது, தற்போது அது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,676 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 7,79,146 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர், 6,406 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், 6,97,699 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மேலும் 31 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருவது அம்மாநில மக்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்