Skip to main content

உக்ரைனில் எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை?- மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

What is the action to rescue the remaining Indians in Ukraine? - Union Minister in the Lok Sabha!

 

உக்ரைன் நாட்டில் எஞ்சியிருக்கும் இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

உக்ரைன் நாட்டில் போரால் சிக்கியிருக்கும் இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் கஷ்டங்களை எதிர்கொள்கிறார்களா, அப்படி எனில் காயமடைந்தவர்கள், எஞ்சியிருக்கும் இந்தியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களைத் தெரிவிக்கும்படி மக்களவையில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

 

தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், தயாநிதிமாறன், கனிமொழி, பாரிவேந்தர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்துள்ளார். 

 

அதில், பிப்ரவரி 1- ஆம் தேதியில் இருந்து இதுவரை 25,000 இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் உக்ரைனில் பத்திரமாக இந்தியா திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்ப தயாராக இருக்கும் எஞ்சிய இந்தியர்களுடன், அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் சுமார் 50 இந்தியர்கள் மட்டுமே எஞ்சியிருக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

 

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் இந்தியர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருவதாக அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 90 விமானம் மூலம் இந்தியர்களுக்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.