Skip to main content

நாப்கின் வரிவிலக்கிற்கு நன்றி தெரிவித்த அக்க்ஷயகுமார்!!

Published on 22/07/2018 | Edited on 22/07/2018

 

aksay kumar

 

 

 

பாலிவுட் நடிகர் அக்க்ஷயகுமார் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கூட்டத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதற்கு ட்விட்டரில் நன்றி  தெரிவித்துள்ளார்.

 

 

பாலிவுட் நடிகரான அக்க்ஷயகுமார் அண்மையில் ''பேட்மன்'' என்ற பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

நேற்று  ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 28-வது கூட்டம் இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிதிப்பு குறைக்கப்பட்டது, அதில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு கொடுக்கப்பட்டது. இதை கேள்விப்பட்ட பாலிவுட் நடிகர்  அக்க்ஷயகுமார் நாப்கினுக்கு வரிவிலக்கு கொடுத்த அரசிற்கு ட்விட்டரில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்