Skip to main content

வராதவர்களெல்லாம் வந்திருக்கிறார்கள்...  வரவேண்டும் கலைஞர் என்றிருக்கிறார்கள்... 

Published on 06/08/2018 | Edited on 06/08/2018

இன்று மாலையிலிருந்தே காவேரி மருத்துவமனை சுற்றுவட்டாரம் சற்று பதற்றமாகவே இருந்தது. ஸ்டாலின், அழகிரி இருவரும் மருத்துவமனைக்கு வந்தனர். மதியம் தயாளு அம்மாள் வருகை தந்தார். இத்தனை நாட்களில் கலைஞரைப் பார்க்க தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தது இன்றுதான் முதல் முறை. ஒரு புறம் இது மகிழ்ச்சியென்றாலும் மறுபுறம் கவலையை உண்டாக்கியது. என்னவோ ஏதோ என்று மருத்துவமனையை சுற்றி இருந்த தொண்டர்கள் கவலைப்பட, உடல்நிலை கவலைக்கிடம் என்று ஒரு செய்தி பரவி, மீண்டும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் காவேரி மருத்துவமனையை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.

 

kauvery1


 

karuna2


 

kauvery 3


 

suthish



காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் 'கலைஞரின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது அங்கிருந்தவர்கள் மட்டுமல்லாது வெளியிலும் கவலையை உண்டாக்கியது. திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வந்தார். கலைஞர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற தொடங்கியதிலிருந்து பல்வேறு கட்சி தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் வந்து நலம் விசாரித்தனர். ஆனால், திமுகவின் எம்.எல்.ஏக்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் பெருமளவில் வந்தால் அது மருத்துவமனைக்கும் சற்று சங்கடம் என்பதால், தலைமை அவர்கள் வருவதை ஊக்குவிக்காமல் இருந்தது. திமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் மட்டுமே வந்து சென்றனர். பொன்முடியும் எ.வ.வேலுவும் மருத்துவமனையிலேயே ஒரு அறை எடுத்து தங்கியிருந்தனர். ஆரம்பத்தில் அங்கிருந்த அழகிரி. கலைஞர் உடல்நிலை தேறியவுடன் கிளம்பிச் சென்றார். ஸ்டாலினும் சில நாட்களுக்கு முன்பு கட்சி அலுவல்களை மெல்ல கவனிக்கத் தொடங்கினார்.

இப்படியிருந்த சூழ்நிலையில் இன்று மாலை காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானது. கலைஞர் உடல்நிலை குறித்து விளக்கிய அந்த அறிக்கையில் இதுவரை இல்லாத வகையில் கலைஞரின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். தொண்டர்கள் மத்தியிலும் பிற கட்சி தலைவர்கள் மத்தியிலும் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் ஒரு பதற்றம் பற்றியிருக்கிறது. கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்துள்ளனர். இதுவரை வராத எம்.எல்.ஏக்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். பொன்முடி, எ.வ.வேலு உள்பட சில முன்னாள் அமைச்சர்களின் குடும்பத்தினரும் வந்துள்ளனர். கலைஞரின் பாதுகாவலர்களாக இருந்த, இருக்கும் அதிகாரிகள், உதவியாளர் சண்முகநாதன், என பலரும் வந்திருக்கின்றனர். தொண்டர் கூட்டம் "எழுந்து வா தலைவா" என்று கோஷமிட்டு வருகிறது. தேமுதிகவிலிருந்து இதுவரை யாரும் வந்து பார்க்காத நிலையில் இன்று அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவரும் அக்கட்சி தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷ் வந்து சென்றார். உடன் விஜயகாந்த்தின்  மூத்த மகன் விஜய பிரபாகரன் வந்தார்.

நேரமாக ஆக, கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறது. வராதவர்களெல்லாம் வந்துகொண்டிருக்கிறார்கள். கலைஞர் மீண்டு வரவேண்டும் என்று நின்று கொண்டிருக்கிரார்கள்.         




 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.