Skip to main content

0.01% கூட பலனில்லை!!! பெண் மருத்துவர் மீது இளைஞர் மோசடி புகார்... அதிகாரிகள் ஷாக்!!!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020
Medicine to grow hair - Complain as Fraud

 

 

தலைமுடி வளர மருத்துவம் அளிப்பதாக விளம்பரம் வந்ததை பார்த்து சிகிச்சை எடுத்ததில் 0.01% கூட முடி வளரவில்லை என்றும், தான் இழந்த ரூபாய் 58,000 பணத்தை திரும்ப தர மறுக்கிறார்கள் என்றும், தனக்கு சிசிச்சை அளித்தவர் தலைமுடி நிபுணர் இல்லை, பல் டாக்டர் என்றும் புகார் மனு கலெக்டரிடம் கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர். 

 

திருச்சி காட்டுர் பகுதியை சேர்ந்த மிதுன் என்பவர் மின்சார வாரிய தற்காலிக தட்டச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய தலையின் முன்பகுதியில் முடி வளருவதற்காக சிகிச்சை செய்து கொள்ள விரும்பியுள்ளார். 

 

இந்நிலையில் கலர்ஸ் என்ற உடல் எடை குறைக்கும் தனியார் நிறுவனம் புதிதாக முடி வளர்வதற்கான சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது என்று அறிந்து விளம்பரத்தை பார்த்து திருச்சி சாலை ரோட்டில் செயல்பட்டு வரும் கலர்ஸ் நிறுவனத்தில் சிகிச்சைக்காக 2018 ஆம் ஆண்டு சேர்ந்து 8 தவணையாக சிகிச்சைக்கு சென்றும் எந்த பலனும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ''என்னை பரிசோதித்த மருத்துவர் மஞ்சுளா 12 தவணையாக சிகிச்சைக்கு வர வேண்டும் என்றும், 6வது முறை சிகிச்சைக்கு பிறகு முடி வளருவதில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று கூறினார். ஆனால் 8 வது தவணை சிகிச்சையும் முடிந்துவிட்டது. இதுவரை 0.01% கூட முடி வளரவில்லை. இதுவரை ரூபாய் 58,000 பணம் கட்டியுள்ளேன். எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினேன். அவர்களிடம் எந்த பதிலும் சரியாக வழங்கப்படவில்லை.

 

அந்த நிறுவனம் குறித்து விசாரித்ததில் பல் மருத்துவர் மஞ்சுளா தான் எனக்கு மருத்துவம் பார்த்தார் என்பதை அறிந்த நான் என்னுடைய பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் திருப்பி தர வேண்டும் என்றால் புதிதாக ஒருவரை சேர்த்து விட்டால் தருகிறோம் என்கின்றனர். எனவேதான் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். பலரது வாழ்க்கை இவர்களால் நாசமடைந்துள்ளது. அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டு கொண்டுள்ளார்.

 

இளைஞரின் இந்த புகாரைப் பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தப் புகார் குறித்து கலெக்டர் அலுவலகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் அந்த இளைஞர். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.