Skip to main content

தொடங்கியது 5ம் கட்ட வாக்குப்பதிவு...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5ம் கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
 

5th phase


இந்த 5ம் கட்ட வாக்குப்பதிவு மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களின் 51 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 94 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சோனியாகாந்தி போட்டியிடும், ரேபரேலி, ராகுல்காந்தியின் அமேதி, ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்