Published on 10/03/2020 | Edited on 10/03/2020
நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
![actor rajinikanth egmore court disposed filed](http://image.nakkheeran.in/cdn/farfuture/pRaEzucFqKNzTgVvoam3EVbPzPFr-G9OdY8j7cHniIE/1583841163/sites/default/files/inline-images/rajinikanth333.jpg)
நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதாக திராவிட விடுதலை கழகத்தின் உமாபதி என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் "துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள், இடையீட்டு மனுவை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.