Skip to main content

ஓபிஎஸ்ஸிற்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்...கண்டுகொள்ளாத எடப்பாடி...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

செப்டம்பர் 12-ஆம் தேதி துரைப்பாக்கம் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு குரோம்பேட்டை பவானி நகரிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சுபஸ்ரீ, விதி ஒரு முற்றுப்புள்ளியை கையில் சுமந்துகொண்டு தன்னைத் தொடர்ந்து கொண் டிருப்பதை அறியவில்லை. கோவிலம்பாக்கம் ஜெ.டி. திருமண மண்டபத்தில் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. காஞ்சி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜெயகோபாலின் மகன் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்துக்கு வருகை தரவிருந்த துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்காக பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் நடுவே அவசர அவசரமாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றிலொன்று எதிர்பாராமல் சரிய, அதிலிருந்து தப்பிக்க முயற்சிசெய்த சுபஸ்ரீமீது தண்ணீர் லாரி மோதி அதே இடத்தில் உயிரிழந்தார்.

 

subasri



கன்றுக்காக மகனை தேர்க்காலில் ஏற்றிய மனுநீதிச்சோழன் காலம்போய் ஆட்சிக்காக யார் காலடியிலும் தவழும் அரசியல் தலைவர்கள் கோலோச்சும் காலமென்பதால், பேனர் விவகாரத்தை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது காவல்துறை. ஆனால் விபத்தை நேரில் கண்டவர்கள் நடந்த கொடூரத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தங்களின் கண்டனங்களை பதிவுசெய்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமான அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால்  மறுநாள் திருமணம் முடியும் வரை மண்டபத்திலே இருந்தார். சுபஸ்ரீயின் ரத்தம் சாலையில் உலர்வதற்குமுன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்.

 

admk



இந்நிலையில், பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த அநீதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பேனரால் உயிர்ப்பலி ஆகவில்லையென வழக்குப் பதிவுசெய்த ஆய்வாளர் ரவிக்குமார் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். சென்னை மாநகராட்சி பாதிக்கப்பட்ட சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஐந்துலட்சம் ரூபாய் தர வேண்டுமென்றும் அந்த பணத்தை தவறுசெய்த அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

  incident



நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, பீகாரைச் சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் என்பவரைக் கைதுசெய்தது காவல்துறை. பேனரை அச்சிட்டுத் தந்த கோவிலம்பாக்கம் அச்சகத்துக்கு சீல்வைக்கப்பட்டது. தற்போதுவரை சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப் படாத நிலையில்... அவர்மீது இ.பி.கோ. 279, 304 (ஏ), 336 பிரிவுகளின் கீழும் கடைசியாக,308 பிரிவின் கீழும் பரங்கிமலை காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவு 308, மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முற்படுபவரின்மேல் பதியும் சட்டப்பிரிவாகும். ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதன்மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மாநில மனித உரிமை ஆணைய நீதிமன்ற வழக்கறிஞர் நைனா முகமது, 2009-ல் இதேபோல ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்தது. அப்போது  உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை ஏற்றது. தீர்ப்பில் இந்த உயிர்ப்பலி ஏற்பட காரணமாக இருந்த கட்சியே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு தரவேண்டுமென தீர்ப்பளித்தது. இந்த வழக்கிலும் அதுபோல எதுவும் நடந்துவிடக்கூடாதென தாமாகவே முன்வந்து பேனர் வைப்பதை தவிர்க்கிறோம் என பிரபல கட்சிகள் அனைத்தும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தும்'' என்றார்.


மேலும் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக போராடி பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட அறப்போர் இயக்க நிர்வாகி அக்தர் அகமது இந்த வழக்கில் அலட்சியமாக செயல்படும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இன்னொரு சுபஸ்ரீக்கு இந்த இக்கட்டு நேரக்கூடாது'' என்றார். குடும்பத்தின் ஒரே வாரிசான சுபஸ்ரீ, கனடா செல்லும் கனவிலிருந்தவர், ஜிம்களில் சொல்லித் தரப்படும் ஜூபா டான்ஸுக்கான இன்டர்நேஷனல் ட்ரைனர். பிரகாசமாகத் தெரிந்த மகளின் எதிர்காலம் ஒரு பேனரால் சரிந்ததை தாங்க முடியாமல் தவிக்கின்றனர் பெற்றோரான ரவியும் கீதாவும்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்காசன் சுபஸ்ரீயின் பெற்றோரைப் பார்த்து ஆறுதல்கூறி நிவாரணத் தொகையையும் வழங்கினர். இது ஒருபுறமிருக்க, சுபஸ்ரீயின் மரணத்துக்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் தவிர, யாரும் ஆறுதல் தெரிவிக்க வில்லையென்ற சர்ச்சை எழுந்துள்ளது. துணைமுதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் என்பதால், அதை அவரே கவனித்துக்கொள்ளட்டுமென இ.பி.எஸ். தரப்பு விட்டுவிட்டதாக சில முணுமுணுப்புகள் அ.தி.மு.க. தரப்பிலிருந்தே எழுந்துள்ளது.

பல்லாவரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வசந்தகுமார், சுபஸ்ரீ பரிதாப பலிக்கு பின் பேனர்களை ஒன்றுவிடாமல் அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றுவதாக கூறிக்கொண்டு சில கடைகளின்  பெயர்ப்பலகைகளைக்கூட கிழித்து அத்து மீறுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று முறையிட்டார். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றவாளிக்கு ஆளுந்தரப்பு பாதுகாப்பளிக்க, வழக்கம்போல அப்பாவிகளிடம் விதிமுறைகளைக் காட்டி வசூலில் கவனம் செலுத்துகிறது காவல்துறை.
 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.