Skip to main content

"நல்லா இருந்த கட்சியை ரவுடி பசங்க கட்சியா மாத்தி வச்சிருக்காங்க; சொந்தக் கட்சிக்குச் சூனியம் வைக்கிறார் அண்ணாமலை..." - ராம.சுப்பிரமணியன் பேச்சு

Published on 03/12/2022 | Edited on 05/12/2022

 

k

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். 

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " இன்றைக்கு பாஜகவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. உழைத்தவர்களுக்கு மரியாதை என்பது சிறிதளவு கூட கிடைப்பதில்லை. இவர்கள் போனால் போகட்டும், நானே போனால் போவேன் என்பதெல்லாம் ஒரு கட்சித் தலைவர் பேசும் பேச்சல்ல.

 

முதலில் அண்ணாமலை என்ன பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும், வாயில் வருவது போவதை எல்லாம் பேசக்கூடாது. நாம் பேசுவதை மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலில் அவர் உணர வேண்டும். சொந்த கட்சிக்கு சூனியம் வைக்கும்  வேலைகளைத்தான் தற்போது அண்ணாமலை செய்து வருகிறார். இந்த மாதிரியான போக்குகளை முதலில் அண்ணாமலை மாற்ற வேண்டும். தான் மட்டுமே கட்சி என்ற அமைப்பு பாஜகவில் மட்டுமல்ல, எந்தக் கட்சியிலும் இருக்காது. மூத்தோர்கள் செய்த தியாகமும், உழைப்புமே இன்றைக்கு பாஜக என்ற இயக்கம் இந்த அளவுக்கு வளருவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. 

 

ஆர்எஸ்எஸ் பாஜக ஆகிய இரண்டு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களே என்னப்பா கட்சி இப்படி போயிட்டு இருக்கு என்று என்னிடம் வருத்தத்தோடே பேசி வருகிறார்கள், நான் உங்கள் கட்சியா என்னிடம் கூறி என்னப்பா ஆகப்போகிறது என்று கூறினேன். படிப்படியா வளர்ந்த கட்சி பாஜக, இன்றைக்கு அதன் போக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா? ரவுடிப் பயல்கள், குற்றச்செயல்கள் செய்பவர்கள் இருக்கின்ற கட்சியாக மாற்றி வைத்துள்ளார்கள். கட்சியில் யாரைச் சேர்க்க வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். 

 

வாய்க்கு வந்ததை மட்டும் பேசிவிட்டால் ஒரு மாநிலத்தலைவர் கட்சியை நல்ல முறையில் வழி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை. பாஜக பேரைக் கெடுத்தது மட்டும் இல்லாமல் தற்போது ஆர்எஸ்எஸ் பெயரே கெட்டுப்போகும் அளவுக்கு அவரின் செயல்பாடு இருந்து வருகிறது. பலரும் என்னிடம் இதுதொடர்பாக தங்களின் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகிறார்கள். தான் பேசுவதே செய்தி என்று எந்த கட்சித் தலைவரும் நினைக்கமாட்டார்கள், ஆனால் தற்போது தமிழக பாஜகவில் அப்படியான சூழ்நிலை நிலவி வருகிறது. இது கட்சிக்கு நல்லதல்ல. கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு பாஜக வந்துள்ளது. அதனைத் தவிடுபொடியாக்கி விட அண்ணாமலை முயற்சிக்க கூடாது" என்றார்.

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.