Skip to main content

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! வெள்ளமே.. வெள்ளமே!

Published on 18/11/2020 | Edited on 19/11/2020
flood

 

குறிப்பிட்ட சில நேரங்களில், பழைய சம்பவங்களும், கசப்பான அனுபவங்களும் மனக்கண் முன் விரியவே செய்யும். அப்படி ஒரு சம்பவம்தான், 2015 டிசம்பர் 1-ஆம் தேதி இரவு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திடுதிப்பென்று திறந்துவிட்டது. அன்று பெய்த தொடர் மழையும், சென்னை மாநகரத்தை, அப்போது  வெள்ளக் காடாக்கி, மக்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது.  

அப்போது, ஏரியில் கட்டிய வீடுகள் வெள்ளத்தில் ‘நீச்சல்’ அடித்தன. வந்தாரை வாழ வைத்த சென்னைக்காரன், அடுத்தவேளை சாப்பாட்டுக்கு யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால்,  தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து, உணவு, உடை, போர்வை, சானிட்டரி நாப்கின், மருந்துப் பொருட்களை வழங்கி திக்குமுக்காட வைத்தனர்,  தமிழ் மக்கள்.

தற்போதும்,  செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கப்போவதாக தகவல் வெளியானதால், மீண்டும் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு ஏரியைத் திறக்க மாட்டோம் என்று  அரசு தெளிவுபடுத்தி இருப்பது,  சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில்,  21 அடியில் உள்ள நீர்மட்டம், 22 அடியை எட்டினால்,  உரிய அறிவிப்பு செய்து திறப்போம் என்று சொல்லி வைத்திருக்கிறது பொதுப்பணித்துறை!

எதற்கும் ஒரு தயார் நிலையில் இருப்பதற்காக,  2015 வெள்ளக் காட்சிகள் சிலவற்றை, நினைவலைகளில் பதிந்துள்ள புகைப்படங்களை மீண்டும் பார்த்து வைப்போம்! 

 

அமெரிக்க தூதரகம் முன்பாக அப்போது எப்படி இருந்தது? 


ஆலந்தூரில் வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் எப்படி மீட்கப்பட்டார்?

 

 I remember that day in my heart! Flood .. Flood!


ஜெமினி பாலத்திற்கு அடியே வெள்ளத்தில் ஆம்புலன்ஸ் மிதந்ததே?

 I remember that day in my heart! Flood .. Flood!


ஆயிரம் விளக்கு உம்மிடி ஜுவல்லரி அருகில் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்ததே?

 I remember that day in my heart! Flood .. Flood!


தேனாம்பேட்டை திரு.வி.க. குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, வளர்ப்பு கிளி, ரேசன் அட்டை, சாதிச்சான்று பள்ளிச் சான்றிதழ்களுடன், காமராஜர் அரங்கம் முன்பு, தஞ்சமடைந்தாரே ஒரு பெண்?

 I remember that day in my heart! Flood .. Flood!


ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அன்றைய நிலை என்ன?

 I remember that day in my heart! Flood .. Flood!


வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எப்படி விநியோகித்தனர்?

 

 I remember that day in my heart! Flood .. Flood!


சைதாப்பேட்டை பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப்போது ஏர்போர்ட்டுக்கு போவதற்கு எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. ஹயாத் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினர், அறைகளைக் காலி செய்துவிட்டு வெளியில் எங்கே செல்வது எனத் தெரியாமல் தவித்தனரே?

 

 I remember that day in my heart! Flood .. Flood!


எல்லா இடத்திற்கும் விரைவாகச் செல்வதற்கு (fastrack) மக்கள் நடைபயணம்தானே மேற்கொண்டனர்?

 

மனத்திரையில் வந்து மோதுகின்றனவே அந்த அவலக் காட்சிகள்! மழைக்காலம் அல்லவா?  எதற்கும், எப்போதும், சென்னைவாசிகள் நாம் தயாராகவே இருப்போம்! 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.