Skip to main content

மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்த எஸ்.ஐ... நெகிழ்ச்சியில் மக்கள்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

SI who brought a part of Madurai district into the security ring! People in resilience

 

மதுரை மாவட்டம், புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகளவில் நடந்துவந்தன. குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் அப்பகுதியில் அதிகளவில் இல்லாததால், குற்றவாளிகளைப் பிடிப்பது காவல்துறைக்குச் சற்று கடினமாக இருந்துவந்தது. 

 

இதன் காரணமாகவும், தனிப்பட்டவர்கள் அவர்களின் கடை, வீடு உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் உறுதுணையாக இருக்கும் சி.சி.டி.வி.களை பொறுத்தச் சொல்லி அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இருந்தபோதிலும், அதனை யாரும் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. 

 

இந்நிலையில், மதுரை மாவட்டம், புதூர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்துவரும் பத்மநாதன், அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு கடையாகத் தினமும் சென்று கண்காணிப்பு கேமரா பொறுத்துவதனால் என்ன பயன் என்பதை எடுத்துச் சொல்லி வந்தார். அவரின் இந்தத் தொடர் முயற்சியால், அப்பகுதியில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளில் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், புதூர் பகுதியின் புறநகரில் உள்ள குடியிறுப்பு பகுதிகளின் குடியிறுப்பு நல சங்கங்களைச் சந்தித்து கூட்டம் கூட்டி சி.சி.டி.வி.யின் அவசியத்தை உணர்த்தி தெருவெங்கும் கண்காணிப்பு கேமராவை பொறுத்தச் செய்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். 

 

இதுகுறித்து பத்மநாதனிடம் கேட்டபோது, “சார், பல்வேறு வழக்குகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எளிதாக சீக்கிரம் குற்ற செய்ல்களில் ஈடுபடுவோரை பிடிக்க பெரும் உதவியாக சி.சி.டி.வி. இருக்கிறது. எனவே, சி.சி.டி.விகளை அமைக்க மக்களிடம் அதன் பாதுகாப்பு மற்றும் பயன்களை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால் கட்டாயம் முன்வருவார்கள் என்று முடிவு செய்து, முதலில் என் சொந்தக் காசில் நோட்டீஸ் அடித்து ஒவ்வொரு கடையாக, வீடாக நானே நேரில் சென்று கொடுத்தேன். 

 

பின் தினமும் போய் அவர்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் போது, வேறு வழியின்றி கேமரா பொறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை 500க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தி ஏறத்தாழ புதூர் ஏரியாவையே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டேன். என்னால் முடிந்த மக்கள் சேவை இது” என்றார். 

 

இதுகுறித்து புதூர் பகுதி கடைக்காரர் ஆனந்த் என்பவர், “காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் மக்கள், போலீஸ் என்றாலே கொஞ்சம் தள்ளித்தான் நிற்பார்கள். ஆனால் இந்த பத்மநாதன் சார் வந்ததற்கு பிறகு உண்மையாகவே காவல் துறை நண்பன்தான் என்பதை எங்களுக்கு உணரவைத்துள்ளார். இப்படிப் பொறுப்புடனும் அக்கரையுடனும் கனிவுடனும் பழகுவது இங்குள்ள வியாபாரிகள் மட்டுமல்ல, மக்களிடமும் காவலர்கள் மீது நன்மதிப்பு ஒரு படி உயர்ந்துள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.