Skip to main content

உள்ளாட்சி உரிமையை முடக்கிய எடப்பாடி அரசு... – திமுக நிர்வாகிகளை மிரட்டிய போலீஸ்...

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

 

Gramasaba meeting admk and dmk issue

 

 

உள்ளாட்சி பிரதிநிதித்துவ சட்டம் என்பது வலிமையானது. கிராம மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நேரடியாக தேர்வு செய்து தங்கள் கிராமத்தை நிர்வாகம் செய்ய வைக்கின்றனர். அந்த கிராம மக்கள் ஒரு திட்டத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த திட்டத்தை எதிர்த்து கிராம சபைக்கூட்டத்தில் அக்கிராம மக்கள் தீர்மானம் இயற்றினால், அதனை குடியரசு தலைவரால் கூட மீற முடியாது.

 

இந்த கிராம சபைக்கூட்டத்தை ஜனவரி 26, மே1, ஆகஸ்ட்15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ஆண்டுக்கு நான்கு முறை இந்தியாவில் கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு தேவைகளை முன்வைத்து விவாதிக்கப்படும். மக்கள் தங்கள் கருத்துக்களை கூறி தீர்மானம் நிறைவேற்றலாம்.

 

கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் மே 1ஆம் தேதி நடைபெற வேண்டிய, கிராம சபைக்கூட்டம் நடத்தவில்லை. அதேபோல் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய கிராமசபைக்கூட்டமும் நடத்தப்படவில்லை.

 

இந்நிலையில் அதே கரோனாவை காரணம் காட்டி அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என ஒரு தரப்பும், இல்லை நடக்கும் என அதிகாரிகள் மட்டத்திலேயே விவாதம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாகங்களுக்கு ஒன்றிய குழு அலுவலர்கள் தகவல் தெரிவித்து கடிதம் அனுப்பினர்.

 

மத்திய அரசு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி 3 வேளாண்மை மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியது மத்தியில் ஆளும் பாஜக. குடியரசு தலைவரை சந்தித்து அந்த மசோதாவில் கையெழுத்திட்டு சட்டமாக்கக்கூடாது என தி.மு.கவினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனையும் மீறி குடியரசு தலைவர் அதில் கையெழுத்திட்டு சட்டமாக்கினார். இது மத்திய, மாநில அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய செய்தது. இதனை கண்டித்து திமுக மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

 

Gramasaba meeting admk and dmk issue

 

 

அதனை தொடர்ந்து கிராம சபைக்கூட்டத்தில், இந்த சட்டத்தை கண்டித்து தீர்மானம் இயற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பஞ்சாயத்து தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது மத்தியில் ஆளும் பாஜகவையும் – மாநிலத்தை ஆளும் அதிமுகவை அதிர்ச்சியடைய செய்தது.

 

தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களாக பெரும்பான்மையாக திமுகவினர் உள்ளனர். விவசாய சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்றினால், அது பெரும் சட்ட சிக்கலில் கொண்டுபோய்விடும் என்பதால் அதிர்ச்சியடைந்தனர். மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் எடப்பாடி அரசு, தமிழகம் முழுவதும் நடக்கயிருந்த கிராமசபை கூட்டத்தினை ரத்துசெய்ய சொல்லி உத்தரவிட, தலைமை செயலாளர் சண்முகம், கரோனாவை காரணம் காட்டி அக்டோபர் 1ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடத்தக்கூடாது ரத்து என மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் அனுப்பினார். இது ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

 

இதனையறிந்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கோபமடைந்தார். கரோனாவை காரணம் காட்டி ஜனநாயகத்தை, கிராம ஊராட்சிகளின் உரிமைகளை பறிப்பது ஜனநாயக விரோதம். கிராம சபைக்கூட்டம் நடைபெறவில்லை என்றாலும், அக்டோபர் 2ஆம் தேதி மக்களை திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் சந்திப்பார்கள் என அறிவித்தார்.

 

அதன்படி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒவ்வொரு கிராமத்தை தேர்வு செய்து அங்கே கிராம சபைக்கூட்டம் நடத்தினர். அந்த கிராம சபைக்கூட்டத்தில், மத்தியில் ஆளும் மோடி அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளித்துவரும் எடப்பாடி அரசை கண்டித்தும் பேசினர்.

 

அரசின் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடந்துள்ளது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கிராமசபை கூட்டம் என்பது ஆண்டுக்கு நான்கு முறையும், மாதம்தோறும் ஊராட்சி மன்ற கூட்டமும் நடைபெறும். கிராம சபைக்கூட்டம் என்பது மிக முக்கியமானது. அங்கு இயற்றப்படும் தீர்மானங்கள் முக்கியமானது. அந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடந்தாலும், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர் ஒருவர் பார்வையாளராக சென்று கலந்து கொள்வார். ஊராட்சி செயலர் முன்னிலையில் நடைபெறும். அவர்கள் முன்னிலையில் இயற்றப்படும் தீர்மானம்மே முக்கியத்துவம் வாய்ந்தது.

 

ஆனால் அதேநேரத்தில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டத்தை அரசாங்கம் ரத்து செய்துவிட்டது. அதனால் அந்த கூட்டங்களுக்கு ஊராட்சி செயலர், அதிகாரி என யாரும் செல்லவில்லை. ஆக கூட்டத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியவில்லை. சில பஞ்சாயத்துகளில் தீர்மான நோட்களில் தீர்மானம் இயற்றி கையெழுத்திட்டுள்ளனர், ஆனாலும் அது செல்லாது என்றார்கள்.

 

மேலும் திமுக பிரமுகர்கள் கலந்துகொள்ளும் கிராமசபை கூட்டங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் சென்று கூட்டம் நடத்தக்கூடாது என மிரட்டியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தக்கோட்டை மற்றும் நிம்மியம்பட்டு கிராமத்தில் திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்துள்ளது. தடையை மீறி கூட்டம் நடத்தினால் கைது செய்வோம் என ஆலங்காயம் போலீஸார் சென்று மிரட்டியுள்ளனர். கைதுதானே செய்யப்போகிறீர்கள் செய்துக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதைப்போல், நாங்கள் மக்களை சந்திப்போம், நீங்கள் கைது செய்துக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு, கூட்டத்தை தொடங்கி மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கு, விவசாய சட்டம் எதிர்ப்பு குறித்து பேசத்தொடங்கினார் தேவராஜ். வந்துயிருந்த காவல்துறை அதிகாரிகள், கூட்டத்தை நடத்தியவர்கள், கலந்துகொண்டவர்கள் யார், யார் என பட்டியல் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

 

அக்டோபர் 1ஆம் தேதி காலை ஊராட்சி மன்ற தலைவர்களை போனில் தொடர்பு கொண்டு அந்தந்த காவல்நிலையத்தில் இருந்து போன் செய்து கூட்டம் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் வழக்கு போடுவோம் என தெரிவித்துள்ளனர். அதனையும் மீறி திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.