Skip to main content

மனுநூலில் மறைந்திருக்கும் சாதி பாகுபாடுகள்... என்ன செய்யவேண்டும் நாம்..! - திருமா சீற்றம்!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

fg

 

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 

அதில், மனுநீதி தொடர்பாக அவர் ஆற்றிய உரை வருமாறு, "சமூக நீதிக்கான விருது எனக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒரு 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையை ஆதரிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு தனிநபர் துதிபாடலுக்கும் இடமின்றி சமூக நீதிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, அதுவும் தாய்க் கழகமான திராவிடர் கழகம், இந்த விருதை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒன்றும் தனிப்பட்ட திருமாவளவனை பெருமைப்படுத்தும் விதத்தில், வழங்கப்பட்டதாக நான் கருதவில்லை. நம் பின்னால் இருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருக்கும் என்பதைமட்டும் நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் சொல்கிறேன் இது தனிப்பட்ட திருமாவளவனை மகிழ்விப்பதற்காகக் கொடுக்கப்பட்ட விருதாக நான் நினைக்கவில்லை. சமூகநீதியை நிலைநாட்டும் பொறுப்பு எங்களுக்கு இதன் மூலம் அதிகரித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால் இந்த விருதை எனக்கு அளித்ததன் மூலம் திராவிடக் கழகத்துக்கு எந்தப் பலனும் கிட்ட போவதில்லை. எனவே யாரும் இதில் உள்நோக்கம் கற்பிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

 

எத்தனையோ படையெடுப்புகள் இந்த தேசத்தின் மீது நடைபெற்றுள்ளன. அந்நியன் இந்த தேசத்தின் மீது படையெடுத்து வந்தான். இந்த நாட்டைக் கட்டி ஆண்டான். ஆனாலும் அவனும் இந்தச் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவேண்டும் என்று விரும்பியது இல்லை. ஒரே குளம், ஆனால் தனித்தனி படித்துறைகள் இருந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடம் இருக்கலாம். ஆனால் சாதிக்கு சாதி தனித்தனி படித்துறைகள் இருந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சில இடங்களில் நாம் பார்த்தும் இருக்கிறோம். தனித்தனி குலதெய்வங்கள், தனித்தனி திருமணச் சடங்குகள் என அனைத்தும் இன்றளவும் தனித்தனியாகவே இருக்கிறது. அனைவரும் இந்துக்களாக இருந்தாலும், திருமணச் சடங்குகள் வெவ்வேறாகவே இன்றளவும் இருந்துவருகிறது. எல்லாச் சாதியினரும் இந்து என்றால், ஏன் அனைவரும் ஒன்றாகச் சடங்கு செய்யவில்லை. இதற்குப் பின்னால் என்ன மறைந்திருக்கிறது என்று நாம் ஆராய்ந்தால் அதற்குப் பின்னால் 'மனு' என்ற நூல் ஆலமரமாக இருக்கிறது என்பதை அறியலாம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை மிக எளிதாக மக்களுக்கு அந்த நூல் கொண்டு சேர்கிறது. 

 

மனுநூல்தான் சத்திரியர்கள் கீழ் நிலையில் இருப்பவர்கள் என்றும் அதனினும் கீழானவர்கள் சூத்திரர்கள் என்றும் பல பிரிவுகளை மேற்கோள்காட்டுகிறது. அந்த நூலை அடிப்படையாகக் கொண்டுதான் இவர்கள் அனைவரும் குல தெய்வத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், யாகம் நடத்த வேண்டும், வாழ்க்கை முறைகளை அதில் கூறியபடி நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மனிதர்களை மட்டமான முறையில் சித்தரித்தது மட்டுமல்லாது சாதியின் பெயரால் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்துப் பார்க்கவேண்டும் என்ற தத்துவத்தையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. இது இன்றைக்கு சமூக ஓட்டத்தில் பரவலாக்கப்பட்டு உள்ளது. அதனை நாம் வீழ்த்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இதற்கான ஒரு களமாக நாம் இதனைப் பார்க்க வேண்டும்" என்றார்.

 

 

 

Next Story

சீமான் கேட்ட சின்னம் மதிமுகவிற்கு; கிட்டத்தட்ட க்ரீன் சிக்னலில் விசிக

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Seeman asked for the symbol for Mdmk; Almost at the green signal for vck

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.