Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி -3

Published on 15/07/2019 | Edited on 18/07/2019

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மகனின் 8 ஆயிரம் கோடி ஊழல்! (CAYMAN ISLANDS FDI SCAM)
 

bjp scams



பிரதமர் மோடிக்கு நெருக்கமான பாஜகவின் கையாள் என்று சொல்லுமளவுக்கு நெருக்கமான அஜித் தோவலின் மகன் விவேக் ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கினார். அதாவது பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட 13 நாட்களுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கினார். இந்த நிறுவனத்துக்கு 2017-18 ஆம் ஆண்டு மட்டும் கேய்மேன் தீவுகளில் இருந்து அன்னிய நேரடி மூலதனமாக 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு நிதி குவிந்தது. இந்தத் தொகை மலைக்க வைக்கும் அளவுக்கு பெரியது. அதாவது 2000மாவது ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த மொத்த நேரடி அன்னிய மூலதனத்துக்கு நிகரானது ஆகும். இந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குனரில் ஒருவர் டான் டபுள்யு இபேங்க்ஸ். இவர் பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்.


சீட்டுக்கம்பெனி ஊழல் (சத்தீஷ்கர்) - CHIT-FUND SCAM (Chhattisgarh)
 

bjp scams


2015 முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சத்தீஷ்கர் மாநிலம் முழுவதும் 111 சீட்டுக்கம்பெனிகள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 697 முதலீட்டாளர்களை ஏமாற்றி, 484 கோடியே 39 லட்சத்து, 18 ஆயிரத்து 122 ரூபாயை சுருட்டின. விவசாயிகளும், ஏழை ஜனங்களும் ஏமாற்றப்பட்ட இந்த ஊழலில் ஒருவருக்கும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்ட ஏழை மக்களின் பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று தங்களால் சொல்ல முடியாது என்று பாஜக தலைவர் கூறிவிட்டார்கள்.



அரசுப் பள்ளிகளை மூடியதில் ஊழல் (ராஜஸ்தான்) -CLOSURE OF GOVT SCHOOLS (RAJASTHAN)
 

bjp scams



ராஜஸ்தான் அரசு 17 அரசுப் பள்ளிகளை மூடியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேற நேர்ந்தது. குறைவான மாணவர்கள் வருகையே பள்ளிகள் மூடப்பட்டதற்கு காரணம் என்று அரசு கூறியது. ஆனால், உண்மை அதுவல்ல. தனியார் பள்ளிகளின் லாப நோக்கத்திற்காகவே அந்தப் பள்ளிகளை அரசு மூட உத்தரவிட்டது. பள்ளிகளை விட்டு நின்ற பிள்ளைகளுக்கு தனியார் பள்ளிகளில் சேருவது ஒன்றே வழியாக இருந்தது. இல்லையென்றால் படிப்பைத் தொடராமல் வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது.


ஹெலிகாப்டர் ஊழல் (சத்தீஷ்கர்) -CHOPPER SCAM (CHHATTISGARH)

 

bjp scams


2007 ஆம் ஆண்டு சத்தீஷ்கர் அரசுக்காக அகஸ்டா 109 பவர் இ ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் குறிப்பிட்ட மாடல் ஹெலிகாப்டரை வாங்குவதற்கு சாதகமாக அதே ஆண்டு முறையற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டது. அரசு விரும்பிய அம்சங்கள் உள்ள ஹெலிகாப்டர்களை வேறு சில கம்பெனிகளும் தயாரித்த நிலையில் 30 சதவீதம் கமிஷன் கொடுத்து அதாவது சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது.



நிலக்கரி ஊழல் (ஜார்கண்ட்) -COAL SCAM (JHARKHAND)
 

bjp scams



ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்க உரிமையை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு வழங்குவதற்காக மோடி அரசின் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர் திலிப் ராய் அரசு விதிகளை தளர்த்தினார். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தின் பிரமதிஹா நிலக்கரி சுரங்கப் பகுதியில் அந்தக் கம்பெனிக்கு உரிமை வழங்கப்பட்டது. காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ் என்ற அந்த நிறுவனம் இந்த உரிமையைப் பெற தேவையான வழிகாட்டு முறைகளை பூர்த்தி செய்யாவிட்டாலும் இந்த உரிமை விதிகளை மீறி வழங்கப்பட்டது.


சிதுர்ஜியா ஊழல் (உத்தரகாண்ட்) -CITURGIA SCAM (UTTARAKHAND)
 

bjp scams


உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் ரமேஷ் பொகாரியால் நிஷாங்க் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார். சிதுர்ஜியா பயோகெமிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை வீடுகட்டும் கம்பெனி ஒன்றுக்கு சாதகமாக வழங்க முதல்வர் ஏற்பாடு செய்தார். அந்த கம்பெனியின் ரிஷிகேஷ் வீடுகட்டும் திட்டத்திற்காக 30 ஏக்கர் நிலத்தை மாற்றிக்கொடுத்து முதல்வர் கோடிக்கணக்கில் லாபம்பெற்றார்.


கடலைமிட்டாய் ஊழல் (மகாராஸ்டிரா) -CHIKKI SCAM (MAHARASHTRA)
 

bjp scams


பாஜக தலைமையிலான மகாராஸ்டிரா அரசின் 206 கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகியது. பாஜக அமைச்சரான பங்கஜா முண்டே பள்ளிக் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் வழங்குவதற்கான டெண்டர் விதிகளை தளர்த்தி, அதாவது, டெண்டரே விடாமல் குறிப்பிட்ட கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்தார். இதற்காக ஒரே நாளில் 24 தீர்மானங்களை அவர் நிறைவேற்றியிருக்கிறார். 3 லட்சத்திற்கு மேல் யாருக்கேனும் ஒப்பந்தம் கொடுக்க வேண்டுமென்றால் ஆன்லைனில் டெண்டர் கோர வேண்டும் என்பது விதியாகும்.

 

முந்தைய பகுதி:

ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2

 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.