Skip to main content

அடுத்த உலகக்கோப்பையில் இவர்களை மிஸ் செய்வீர்களா?

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

உலக கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பில் தள்ளியிருக்கிறது அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர். ஒவ்வொரு அணியும் அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 
 

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர், ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, சென்ற உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட முக்கியமான வீரர்கள் அடுத்த சீசனில் இருக்கமாட்டார்கள். நீங்கள் மிஸ் செய்பவர்களாக அவர்கள் இருக்கலாம் என்ற நினைப்பில் தயார் செய்யப்பட்ட லிஸ்ட் இது.. நாங்கள் மிஸ் செய்த வீரர்களை கமெண்டில் குறிப்பிடலாம். 
 

 

 

திலகரத்னே தில்ஷன் - இலங்கை 
 

இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டுபவர். ஆக்ரோஷமான ஸ்டைலில் பவுலர்களை பந்தாடுவதில் ஸ்பெஷலிஸ்ட். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் 7 போட்டிகளில் 395 ரன்கள் விளாசியிருந்தார். ஆனால், உலகக்கோப்பைக்குப் பிந்தைய நீடிக்காத ஃபார்ம் அவரை கட்டாய ஓய்வுக்குத் தள்ளியது. 2016ஆம் ஆண்டு அவர் ஓய்வை அறிவிக்கும்போது, உலகளவில் அதிக ரன்கள் அடித்த 11ஆவது வீரராக இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக இருந்தாலும், சிறந்த ஆல்ரவுண்டராகவும் செயல்பட்டு பல விக்கெட்டுகளைக் குவித்துள்ளார். 
 

மிஸ்பா உல் ஹக் - பாகிஸ்தான் 
 

misbah

 

 

 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக், 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களை பயத்தின் உச்சிக்கே கூட்டிச்சென்றவர். 2015 உலகக்கோப்பை போட்டியில் 7 போட்டிகளில் 350 ரன்கள் விளாசியிருந்தார். 2017ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும், அனைத்து ஃபார்மேட்டுகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதமே அடிக்காமல் கடைசிவரை இருந்தவர்.
 

டேனியல் வெட்டோரி - நியூசிலாந்து
 

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர். உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தனது அணியை முதல்முதலாக கூட்டிச்சென்ற பெருமைக்குரியவர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், சாமுவேல்ஸ் விரட்டிய பந்தை பவுண்டரி லைனில் ஒற்றைக் கையில் பிடித்து எனக்கின்னும் வயசாகலை என நிரூபித்தவர். ஆனால், ஏனோ அந்த சீசன் முடிவிலேயே தனது ஓய்வையும் அறிவித்தார்.
 

 

 

குமார் சங்ககாரா - இலங்கை
 

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை அதிக ரன் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 7 போட்டிகளில் 541 ரன்கள் விளாசியிருந்தார். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்குப் பின்னர், கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 2017ஆம் ஆண்டு அனைத்து ஃபார்மேட்டுகளில் இருந்து ஓய்வுபெற்ற இவர், விளையாட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிக்ஸர்கள் பறக்கவிட்டு அதிரவைக்கிறார். 
 

ஏபி டிவில்லியர்ஸ் - தென் ஆப்பிரிக்கா 
 

Ab

 

 

 

கிரிக்கெட் உலகில் அதிகம் நேசிப்பட்டவர்களில் ஒருவர். 360 டிகிரிக்கும் சுழன்று சுழன்று பந்தை பறக்கவிடும் வித்தைக்காரர். இந்த ஆண்டின் மிகுந்த அதிர்ச்சிக்குரிய ஓய்வு அறிவுப்பு இவருடையதுதான். ஐ.பி.எல். தொடரில் தான் ஒரு சூப்பர் மேன் என்பதை நிரூபித்த இவர், நல்ல ஃபார்மில் இருக்கும்போதே என் ஓய்வை அறிவிப்பதை சரி என்று நினைக்கிறேன் எனக்கூறி அனைத்து ஃபார்மேட்டுகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 
 

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

“விளையாட்டுத்துறையில் தலைசிறந்த  மாநிலமாக தமிழகம் உள்ளது”-  அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில்  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு  மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, திருக்குறள், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை  அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னையில் 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல இளைஞர்  நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தேசிய,  மாநில ஆசிய விளயாட்டு போட்டி மற்றும் பல்கலைக்கழக  விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி  பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி  சிறப்பித்து வருகிறார். இன்று சென்னையில் தொடங்கும் கேலோ  இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்” என்றார்.

 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

இறுதியாக பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, கோவை  ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற  உள்ளது. தமிழகத்தில் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுத்துறைக்கும்,  முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டுத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து, கபடி போட்டிகளில் மிக சிறந்த மாணவர்கள் உள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள  மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று நமது  மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை  வகித்தார். மாவட்ட எஸ்பி. பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினரும்,  கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர்  இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணைச்  செயலாளர் ஜெயன், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர்   நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான  ராஜேந்திரகுமார், ஜானகிராமன்,  சந்திரசேகர் உள்பட கட்சிப்பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.