Skip to main content

முகமது ஷமி மீது காவல்துறை வழக்கு பதிவு..மகிழ்ச்சியில் மனைவி..

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

shami

 

முகமது ஷமியை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது மனைவி ஹசின் ஜஹான், கடந்த ஆண்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அதன் அடிப்படையில்  4 பிரிவுகளில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபனம் ஆனால் முகமது ஷமிக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். இது குறித்து ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் மகிழ்ச்சி தெரிவித்த, காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.